விகாராதிபதிக்கு எதிரான வழக்கில் முதல் மரபணு பரிசோதனை அறிக்கை நீதிமன்றத்தில்
முன்னாள் அட்டமஸ்தானங்களின் விகாராதிபதி பல்லேகம ஹேமரத்ன தேரர் சந்தேகநபராக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள 15 வயது சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு ஆளாக்கப்பட்டதாகக் கூறப்படும் வழக்கின் விசாரணையில் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கு கடந்த 26ஆம் திகதி அநுராதபுர நீதிவான் சியபத் சசிந்து விக்ரமரத்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது சம்பவம் தொடர்பான முதலாவது மரபணு (DNA) பரிசோதனை அறிக்கை ஏற்கனவே கிடைத்துள்ளதாக நிட்டம்புவ பொலிஸ் தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் பி.எம். அநுர குணவர்தன நீதிமன்றத்தில் அறிவித்தார். […]
