Tag: Energy Market
Saudi oil attack, ஜேமனில் செயல்படும் ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியாவின் முக்கியமான கச்சா எண்ணெய் விநியோக மற்றும் போக்குவரத்து கட்டமைப்புகளை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்தியதாக அறிவித்துள்ளனர். ஹூதி இராணுவ பேச்சாளர் யஹ்யா சாரி வெளியிட்ட அறிக்கையில் கிழக்கு சவுதியை செங்கடல் பகுதியில் அமைந்துள்ள முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமான யன்பு துறைமுகத்துடன் இணைக்கும் பல முக்கிய இடங்கள் குறிவைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை யேமன் வான்வெளியில் சவுதி அரேபியா மேற்கொண்டதாக கூறப்படும் […]
சர்வதேச அளவில் மசகு எண்ணெய் உற்பத்தி செய்யும் முன்னணி நாடுகளின் கூட்டமைப்பான OPEC+ வரும் ஆகஸ்ட் மாதம் முதல் நாளாந்த எண்ணெய் உற்பத்தியை மேலும் 188,000 பீப்பாய்களால் அதிகரிக்க கொள்கை ரீதியாக உடன்பாடு கண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மத்திய கிழக்கில் நிலவிய பதற்ற நிலைமை தணிந்து உலகின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி கடல்வழியான ஹோர்முஸ் நீரிணை படிப்படியாக மீண்டும் திறக்கப்பட்டு வருவதும், சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை குறைந்து வருவதும் இந்தத் தீர்மானத்திற்கு முக்கிய காரணங்களாகக் […]
ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படக்கூடும் என்ற தகவல்கள் வெளியாகியதைத் தொடர்ந்து அமெரிக்க கச்சா எண்ணெய் (U.S. crude) எதிர்கால விலைகள் 6 சதவீதத்திற்கும் அதிகமாக சரிந்துள்ளன. அமெரிக்கா–ஈரான் இடையிலான பதற்றத்தை குறைக்கும் ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் முன்னேறி வருவதாக வெளியான தகவல்கள் சந்தைகளில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன. உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்து வழித்தடங்களில் ஒன்றான ஹோர்முஸ் நீரிணை மீண்டும் வழமையான கப்பல் போக்குவரத்துக்கு திறக்கப்பட்டால் உலகளாவிய எண்ணெய் விநியோகம் சீராகும் என்ற எதிர்பார்ப்பு முதலீட்டாளர்களிடையே உருவாகியுள்ளது. இதன் […]
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பதற்றம் மேலும் அதிகரித்துள்ள நிலையில் உலகின் முக்கிய எண்ணெய் கடற்பாதையான ஹோர்முஸ் நீரிணையை பயன்படுத்தும் கப்பல்களுக்கு கட்டணம் விதிக்கும் புதிய திட்டத்தை ஈரான் அறிவித்துள்ளது. ஈரான் நாடாளுமன்ற தேசிய பாதுகாப்புக் குழுத் தலைவர் இப்ராஹிம் அசிசி நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களின் போக்குவரத்தை கட்டுப்படுத்தும் புதிய நடைமுறை உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். குறிப்பாக ஈரானுடன் ஒத்துழைக்கும் நாடுகள் மற்றும் வணிகக் கப்பல்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் எனவும் சிறப்பு சேவைகளுக்காக கட்டணம் வசூலிக்கப்படும் […]
ஈரான் போர் – பலமான கட்டுப்பாடுகள் தேவை, அமெரிக்காவிடம் வளைகுடா நாடுகள் வலியுறுத்தல். மத்திய கிழக்கில் அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே ஏற்பட்ட போருக்கு பிறகு வெறும் போர்நிறுத்தம் மட்டும் போதாது ஈரானின் இராணுவ மற்றும் தாக்குதல் திறன்களை நிரந்தரமாக கட்டுப்படுத்தும் ஒப்பந்தம் வேண்டும் என்று வளைகுடா அரபு நாடுகள் அமெரிக்காவிடம் வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, ஏவுகணைகள் ட்ரோன் தாக்குதல்கள் மற்றும் ஈரான் ஆதரவு ஆயுத குழுக்கள் மூலம் எதிர்காலத்தில் மீண்டும் அச்சுறுத்தல் ஏற்படாமல் இருக்க […]