டொலர் உயர்வு மக்களின் சுமையை அதிகரிக்கும் காவிந்த ஜயவர்தன எச்சரிக்கை
டொலரின் பெறுமதி உயர்வடைவது நாட்டின் பொருளாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தாது என அரசாங்கம் முன்வைத்து வரும் கருத்துக்கள் எந்தவித அடிப்படையும் அற்றவை என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி தலைமையகத்தில் திங்கட்கிழமை (08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர் டொலரின் பெறுமதி அதிகரிக்கும் போது நாட்டின் வெளிநாட்டு கடன்களை ரூபாய் மதிப்பில் மீளச் செலுத்த வேண்டிய சுமை பல மடங்கு அதிகரிக்கும் என்றும் அதன் […]
