Tag: Justice Minister
Semmani Mass Grave, மனித புதைகுழி விவகாரத்தில் உண்மையான குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு உரிய தண்டனை வழங்கப்படும் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (28) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் கருத்து தெரிவிக்கையில் இந்த விவகாரம் தொடர்பான விசாரணைகள் முழுமையான வெளிப்படைத்தன்மையுடனும் சட்ட நடைமுறைகளுக்குட்பட்டும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கூறினார். எந்தவித அழுத்தங்களும் இன்றி உண்மையை […]
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறை மோதலைத் தொடங்கிய சில கைதிகள் ஆயுதங்களைப் பெற்று இரும்புக் கதவை உடைத்துக்கொண்டு தப்பிச் செல்ல முயன்றதாக நீதி அமைச்சரும் சட்டத்தரணியுமான ஹர்ஷனா நனயக்கார நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தை அரசாங்கம் ஒருபோதும் குறைத்து மதிப்பிடவில்லை என்றும் சிறைக்குள் போதைப்பொருட்கள் மற்றும் சட்டவிரோதப் பொருட்கள் நுழையும் வழிமுறையைச் சீர்குலைப்பதே மோதலில் ஈடுபட்டவர்களின் நோக்கமாக இருந்ததாகவும் அவர் கூறினார். ஆயுதமற்ற இரண்டு சிறை அதிகாரிகள் முதலில் தாக்கப்பட்டதாகவும் அவர்களை மீட்க சென்ற பிற அதிகாரிகளும் […]
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறை மோதலில் காயமடைந்து நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கைதி ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 7 சிறைச்சாலை அதிகாரிகளும் அடங்குவதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை மோதலில் காயமடைந்த சிறைச்சாலை அதிகாரிகளின் உடல்நிலையை நேரில் பார்வையிடுவதற்காக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலைக்கு விஜயம் செய்து, அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் […]
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற கொடூரமான கலவரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். முன்னதாக இந்தச் சம்பவத்தில் 25 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியிருந்ததுடன் அவர்களில் ஆறு பேர் சிறைச்சாலை அதிகாரிகள் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவரின் உயிரிழப்பைத் தொடர்ந்து மொத்த பலி எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளதாக அமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளார். இந்தக் கலவரத்தில் பலர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று […]