Tag: Kurunegala news
குருநாகல் மாவட்டத்தின் வெலகெதர பகுதியில் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற கொலை மற்றும் கொலை முயற்சி சம்பவம் தொடர்பான வழக்கில் ஐந்து பேருக்கு கம்பஹா மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. அத்தனகல்லா வெலகெதரவைச் சேர்ந்த தாய் தந்தை மற்றும் அவர்களது இரண்டு மகன்கள் உள்ளிட்ட ஐந்து பேருக்கு மேல் நீதிமன்ற தலைமை நீதிபதி ரஷ்மி சிங்கப்புலி நேற்று (17) இந்த தீர்ப்பை வழங்கினார். 2001 ஆம் ஆண்டு ஒக்டோபர் 31ஆம் திகதி வெலகெதர […]
குருணாகல் மாவட்டத்தின் அலவ்வ பகுதியில் சட்டவிரோதமாக பொருத்தப்பட்டிருந்த மின்சாரக் கம்பியில் சிக்கி 33 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று (14) காலை அலவ்வ நகருக்கு அருகிலுள்ள காணி ஒன்றின் அருகே பெண்ணின் சடலம் மீட்கப்பட்டது. ஆரம்ப விசாரணைகளில் குறித்த காணியில் பயிரிடப்பட்டிருந்த மரவள்ளிக்கிழங்கு பயிர்களை காட்டு விலங்குகளிடமிருந்து பாதுகாப்பதற்காக சட்டவிரோதமான முறையில் மின்சாரக் கம்பிகள் பொருத்தப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது. உயிரிழந்த பெண் தேங்காய் பொறுக்குவதற்காக காணிக்குள் நுழைந்தபோது மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்திருக்கலாம் […]
குருநாகல் மாவட்டத்தின் பிங்கிரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட படிவெல பகுதியில் நேற்று (10) இடம்பெற்ற குடும்ப வன்முறைச் சம்பவத்தில் 61 வயதுடைய பெண் ஒருவர் அவரது கணவரால் கூர்மையான ஆயுதத்தால் தாக்கிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முதற்கட்ட விசாரணைகளின் படி கணவன் மற்றும் மனைவிக்கிடையில் ஏற்பட்ட குடும்பத் தகராறு தீவிரமடைந்ததன் விளைவாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. தாக்குதலில் படுகாயமடைந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரான 59 வயதுடைய கணவர் பொலிஸாரால் கைது […]