Tag: Negombo Prison Riot
நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற கொடூரமான வன்முறை மோதல் தொடர்பான விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. மோதலின்போது சிறை அதிகாரிகளைத் தாக்க கைதிகள் பயன்படுத்தியதாகக் கூறப்படும் பல கூர்மையான ஆயுதங்கள், இரும்புக் கம்பிகள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தடிகள் சிறை வளாகத்தில் நடத்தப்பட்ட விசேட சோதனையின் போது மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் கைதிகள் சிறைச்சாலையின் சமையலறைக்குள் நுழைந்து அங்கிருந்த தேங்காய்களையும் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்த பயன்படுத்தியதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்த வன்முறைச் சம்பவத்தில் […]
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஜூலை 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் இடம்பெற்ற வன்முறை மோதலில் உயிரிழந்த சிறை அதிகாரிகள் மற்றும் கைதிகள் தொடர்பான பிரேதப் பரிசோதனையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐந்து பேர் கொண்ட தடயவியல் மருத்துவக் குழு 24 உடல்களுக்கு மேற்கொண்ட பிரேதப் பரிசோதனையின் படி சிறை அதிகாரிகள் தலையில் ஏற்பட்ட கடுமையான தாக்குதல்களால் உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மொத்தமாக ஆய்வு செய்யப்பட்ட மரணங்களில் 14 பேர் துப்பாக்கிச் சூட்டாலும் 9 பேர் கொடூரமான தாக்குதல்களாலும் […]
நீர்கொழும்பு சிறைச்சாலையில் சமீபத்தில் இடம்பெற்ற வன்முறைக் கலவரத்தின் பிரதான சந்தேகநபராகக் கருதப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட பாதாள உலகக் குழு உறுப்பினர் கட்டுவெல்லகம சுரேஷ் தனது சிறை அறைக்குள் மற்றொரு கைதிகள் குழுவினரால் தாக்கப்பட்டதில் கடுமையாகக் காயமடைந்துள்ளதாக சிறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய போட்டி குழுவினரால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்ற நிலையில் அவருக்கு முதுகுப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தற்போது நடக்க முடியாத நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேவேளை […]
நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட வன்முறை மோதலைத் தொடங்கியதாகக் கூறப்படும் கட்டுவெல்லகம சுரேஷ் என்ற கைதி பாதுகாப்பு காரணங்களால் பூஸ்ஸ உயர் பாதுகாப்பு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். பாதாள உலகக் கும்பல் உறுப்பினர் கெஹல்பத்தார பத்மேவுக்கு நெருக்கமானவராகக் கருதப்படும் கட்டுவெல்லகம சுரேஷ் மீது கூரிய ஆயுதங்களால் தாக்குதல் நடத்துதல் கொள்ளை, போதைப்பொருள் வைத்திருத்தல் மற்றும் விற்பனை செய்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் நிலவுகின்றன. மேலும் 2016 ஆம் ஆண்டு நாரம்மலை பகுதியில் உள்ள கோவிலொன்றில் துறவி மற்றும் அவரது […]