போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய போட்டி குழுவினரால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்ற நிலையில் அவருக்கு முதுகுப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தற்போது நடக்க முடியாத நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை சமூக ஊடகங்களில் அவர் உயிரிழந்ததாக பரவி வரும் தகவல்கள் உண்மையல்ல என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறையில் 7 சிறை அதிகாரிகள் உட்பட மொத்தம் 27 பேர் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்தனர். இந்தக் கலவரத்தை திரைக்குப் பின்னால் இருந்து திட்டமிட்டு வழிநடத்தியவர் சுரேஷ் என விசாரணை அதிகாரிகள் சந்தேகிப்பதாகவும் கூறப்படுகிறது.
சம்பவத்திற்குப் பின்னர் சுரேஷ், ராக்கி உள்ளிட்ட பல உயர் பாதுகாப்பு கைதிகள் காலி பூசா உயர் பாதுகாப்பு சிறைக்கு மாற்றப்பட்டதுடன் ஏனைய கைதிகள் நாட்டின் பல்வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டனர். இடமாற்றத்திற்குப் பின்னர் மூன்று கைதிகள் உயிரிழந்த சம்பவங்களும் தற்போது காவல்துறையினரால் தனித்தனியாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. கைதிகள் மீதான மனிதாபிமானமற்ற நடத்தைகள் குறித்து எழுந்துள்ள குற்றச்சாட்டுகளையும் சம்பந்தப்பட்ட தரப்புகள் தொடர்ந்து ஆராய்ந்து வருகின்றன.



























