Tag: Northern Province Sri Lanka
வடக்கு கடல் தீவுகளில் வாழும் ஆயிரக்கணக்கான மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நனவாகும் வகையில் நெடுந்தீவு, நயினாதீவு மற்றும் அனலைத்தீவுக்கு 24 மணி நேர மின்சாரம் வழங்கும் திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளது.பல ஆண்டுகளாக குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே மின்சாரம் கிடைத்த இந்த தீவுப் பகுதிகளில் இனி பகல்-இரவு பாராமல் தொடர்ச்சியான மின்சார வசதி கிடைக்கவுள்ளது. இதன் மூலம் மக்களின் அன்றாட வாழ்க்கை, கல்வி, சுகாதாரம் மற்றும் சிறு தொழில் நடவடிக்கைகளில் பாரிய முன்னேற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.குறிப்பாக மாணவர்கள் […]
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சின் தெற்காசியா மற்றும் ஆப்கானிஸ்தான் பிரிவு அதிகாரிகளைச் சந்தித்து செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளார். இதன்போது செம்மணி அகழாய்வில் இதுவரை 380-க்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் இது இலங்கையில் இதுவரை கண்டறியப்பட்ட மிகப் பெரிய மனிதப் புதைகுழியாக கருதப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணும் பணிகளில் முன்னேற்றம் […]
யாழ்ப்பாண மாவட்டத்தில் இலங்கை கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக முக்கிய கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது. மக்கள் போராட்ட முன்னணியின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே இன்று (7) யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழில் மற்றும் நீர்வளத்திணைக்கள உதவி பணிப்பாளரை சந்தித்து கடற்றொழிலாளர்கள் சந்திக்கும் சவால்களை நேரில் முன்வைத்தார். குறிப்பாக இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய கடற்றொழில் நடவடிக்கைகள் காரணமாக இலங்கை கடற்றொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் இதனை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும் கடல் வளங்கள் […]