Tag: Politics
இலங்கை பிரதமர் Harini Amarasuriya 22வது ஆண்டு பொதுநலவாய கல்வி மாநாடு மற்றும் Commonwealth of Learning (COL) 2026 ஆளுநர் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக உத்தியோகபூர்வ விஜயமாக பிரிட்டனுக்கு புறப்பட்டுள்ளார். இந்த விஜயத்தின் போது கல்வி, ஆராய்ச்சி, அபிவிருத்தி ஆய்வுகள் மற்றும் சர்வதேச கூட்டாண்மைகளை வலுப்படுத்தும் நோக்கில் பல உயர்மட்ட கல்வி மற்றும் இராஜதந்திர சந்திப்புகளில் அவர் கலந்து கொள்ளவுள்ளார். பிரிட்டன் கல்வி செயலாளர் Bridget Phillipson மற்றும் வெளிவிவகார செயலாளர் Yvette Cooper ஆகியோருடன் […]
பிரிட்டனில் சிறைச்சாலைகளில் அதிக நெரிசல் நிலவுவதால், சில கைதிகளை தண்டனை காலம் முடிவதற்கு முன்பே விடுவிக்கும் திட்டம் குறித்து கடும் சர்ச்சை எழுந்துள்ளது. அரசு முன்வைத்துள்ள இந்த திட்டம், சிறை நிரம்பிய நிலையை சமாளிக்க அவசியமானதாக அதிகாரிகள் விளக்கினாலும், இதனால் பொதுமக்கள் பாதுகாப்பு பாதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. குறிப்பாக குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களை முன்கூட்டியே விடுவிப்பது மீண்டும் குற்றங்கள் அதிகரிக்க வழிவகுக்கலாம் என்று எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். அதே சமயம், சிறைச்சாலை அமைப்பின் மேலாண்மை […]
ஆப்கானிஸ்தானில் பிரிட்டனுடன் இணைந்து பணியாற்றியவர்களின் தனிப்பட்ட தகவல்கள் தவறுதலாக வெளியானதாக வெளிவந்த சம்பவம் குறித்து பிரிட்டன் அரசின் நடவடிக்கைகள் மீது கடுமையான கேள்விகள் எழுந்துள்ளன. இந்த தரவு கசிவு சம்பவம் பாதுகாப்பு குறைபாடுகளை வெளிப்படுத்தியதுடன் உயிர் அச்சுறுத்தலுக்குள்ளாகக்கூடிய பலரின் விவரங்கள் வெளியானதாக கூறப்படுகிறது. இதையடுத்து அரசின் முன்னாள் நிர்வாகம் இந்த விவகாரத்தில் எப்படி செயல்பட்டது என்ற கேள்வியும் எழுந்துள்ளது. பிரதமர் இந்த விஷயத்தில் “கடுமையான விளக்கங்கள் தேவை” எனக் கூறியதுடன் இது போன்ற தவறுகள் மீண்டும் நடைபெறாத […]
குற்றவாளி வெளிநாட்டவர்களை நாடுகடத்த புதிய வழி- ஜெர்மனி நீதிமன்றம் ஜெர்மனியில் சமீபத்தில் வெளியான ஒரு முக்கியமான நீதிமன்ற தீர்ப்பு, கடுமையான குற்றங்களில் ஈடுபடும் வெளிநாட்டு குடியிருப்பாளர்களை நாடுகடத்த அரசாங்கத்திற்கு சட்ட ரீதியான வலிமையை அதிகரித்துள்ளது. குறிப்பாக கர்ல்ஸ்ரூ (Karlsruhe) நிர்வாக நீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்பு பாதுகாப்பு மற்றும் பொதுநலன் முன்னுரிமை பெற வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. இந்த வழக்கு சிறுவயதில் ஜெர்மனிக்கு வந்த ஒரு சிரிய அகதி மீது மையப்படுத்தப்பட்டது அவர் பின்னர் கடுமையான வன்முறை […]
மீண்டும் தாக்குதல் – ஈரான் முழுமையாக அழிக்கப்படும். அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் அமெரிக்க இராணுவம் மிகப்பெரிய தாக்குதலுக்கு தயாராக உள்ளது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க போர்க்கப்பல்கள் மற்றும் இராணுவம் “மிகச் சிறந்த ஆயுதங்களால்” மீண்டும் தாக்குதல் செய்ய ஆயத்தப்படுத்தப்பட்டு வருகின்றன என்றும் தேவையானால் ஈரானுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். சமீபத்திய மோதல்களுக்கு பிறகு இரு நாடுகளுக்கும் […]