இளைஞர்களிடையே எச்.ஐ.வி பரவல் அதிகரிப்பு
நாட்டில் கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இளைஞர்கள், யுவதிகள் மற்றும் மாணவர்கள் மத்தியில் எச்.ஐ.வி மற்றும் பாலியல் ரீதியாக பரவும் தொற்றுநோய்களின் பரவல் அதிகரித்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளதால் அதைக் கட்டுப்படுத்த அரசாங்கம் பல்துறை ரீதியான அவசர நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர் சமீபத்திய சுகாதாரப் புள்ளிவிபரங்களின்படி பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்களிடையிலும் எச்.ஐ.வி தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை கவலைக்குரிய விடயமாக இருப்பதாக குறிப்பிட்டார். […]
