டெங்கு பரிசோதனை கட்டணத்தை உடனடியாக குறைக்க வேண்டும்
நாட்டில் தீவிரமடைந்து வரும் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்துவதுடன் தனியார் ஆய்வகங்களில் டெங்கு பரிசோதனைக்காக அறவிடப்படும் கட்டணத்தையும் உடனடியாகக் குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அசேல சம்பத் வலியுறுத்தியுள்ளார். தேசிய நுகர்வோர் முன்னணி காரியாலயத்தில் இன்று (04) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர் தற்போது தனியார் ஆய்வகங்களில் டெங்கு பரிசோதனைக்காக சுமார் 1,200 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுவது குறைந்த வருமானம் பெறும் […]
