பல மாவட்டங்களில் இடைக்கிடையே மழை
சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் தெரிவித்துள்ளது. இதேவேளை நாட்டின் ஏனைய பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை நிலவும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சிலாபம் தொடக்கம் கொழும்பு ஊடாக காலி வரையிலான கரையோரத்திற்கு அப்பால் அமைந்துள்ள கடல் பிராந்தியங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலுக்குச் செல்லும் மீனவர்கள் மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் […]
