Tag: Sri Lanka Customs
Paperless Customs, அரச சேவைகளை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கும் அரசின் முயற்சியின் ஒரு பகுதியாக காகிதமில்லா சுங்கப் பிரகடன (Paperless Customs Declaration Processing System) முறைமை எதிர்வரும் ஒக்டோபர் 1 முதல் அமல்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் டாக்டர் நந்திக சனத் குமாரநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள SEMA கட்டிடத்தில் நேற்று (28) நடைபெற்ற டிஜிட்டல் கையொப்பம் (LankaSign) மற்றும் காகிதமில்லா சுங்கப் பிரகடன முறைமை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வில் உரையாற்றிய அவர் இந்த திட்டம் அரசின் […]
சுங்கத்துறையால் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வனின் நூல்கள் தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை (18) கொழும்பில் இடம்பெற்ற இந்த விசாரணையில் எழுத்தாளர் தீபச்செல்வன் சார்பில் சட்டத்தரணி கலாநிதி விரஞ்சன ஹேரத் மற்றும் சட்டத்தரணி நடராஜா காண்டீபன் ஆகியோர் முன்னிலையாகினர். அதேவேளை எதிர்த்தரப்பினராக முறைப்பாடு செய்யப்பட்டிருந்த பாதுகாப்பு அமைச்சு கலாசார அமைச்சு மற்றும் சுங்கத் திணைக்களத்தின் சார்பிலும் சட்டத்தரணிகள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர். விசாரணையின் போது தமிழ் மக்களின் வரலாறு […]
இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்த முயன்றதாக சந்தேகிக்கப்படும் 26 பயணிகள் காங்கேசன்துறை துறைமுகத்தில் இன்று (புதன்கிழமை) சுங்கத் திணைக்கள அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். காங்கேசன்துறை மற்றும் நாகப்பட்டினம் இடையே சேவையாற்றும் சிவகங்கை பயணிகள் கப்பல் நேற்று காலை நாகப்பட்டினத்தில் இருந்து 117 பயணிகளுடன் காங்கேசன்துறையை வந்தடைந்தது. அதனைத் தொடர்ந்து காங்கேசன்துறையில் இருந்து நாகப்பட்டினம் நோக்கி பயணிக்க 146 பேர் காத்திருந்த நிலையில் அவர்களில் 26 பேரை தங்கம் கடத்த முயன்றதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் சுங்க […]