Tag: Sri Lanka Tamils
ஜூலை 5 ஆம் திகதி ஈழத் தமிழ் மக்களின் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த நாளாகக் கருதப்படுவதுடன் ஒரு இனத்தின் வரலாறு அதன் தியாகங்களின் ஆழம் மற்றும் இலட்சியப் பற்றுறுதியின் அடிப்படையில் நினைவுகூரப்பட வேண்டியதென வலியுறுத்தப்பட்டுள்ளது. வெளியிடப்பட்ட நினைவு செய்தியில் ஒரு சமூகத்தின் வரலாற்றை வழக்கமான அளவுகோல்களால் மதிப்பிட முடியாது என்றும் சுதந்திரம், உரிமை மற்றும் இலட்சியங்களுக்காக தனிப்பட்ட வாழ்வையும் தாண்டி தன்னலமின்றி அர்ப்பணிக்கப்பட்ட தருணங்களே அந்த வரலாற்றின் மகத்துவத்தை வெளிப்படுத்துகின்றன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மனிதனின் இயல்பான உயிர்ப்பற்றுதலையே […]
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கை மையமாகக் கொண்டு செயற்படும் தமிழ்த் தேசியப் பேரவையின் பிரதிநிதிகள் குழு வெள்ளிக்கிழமை (03) சென்னை நகரில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யை சந்தித்து ஈழத்தமிழர் மக்களின் அரசியல் மனித உரிமைகள் மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகள் தொடர்பாக விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டது. தமிழ்நாடு அரசுத் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது ஈழத்தமிழர் மக்களின் கோரிக்கைகள் அடங்கிய எழுத்துமூல மனுவொன்றும் முதலமைச்சரிடம் கையளிக்கப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவருமான கஜேந்திரகுமார் […]
முதல் மாவீரன் தியாகி பொன் சிவகுமாரனின் 52ஆவது ஆண்டு நினைவு நாள் வவுனியாவில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. வவுனியா குருமன்காடு பகுதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில்,வட்டுக்கோட்டை 50 எழுச்சி மாநாட்டு குழுவின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு வெள்ளிக்கிழமை (05) நடைபெற்றது. இதனுடன் இணைந்த வகையில் வட்டுக்கோட்டை 50 எழுச்சி மாநாட்டின் வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமும் இடம்பெற்றது. கூட்டத்தின் போது எதிர்வரும் எழுச்சி மாநாட்டை முன்னிட்டு வவுனியா மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய செயற்பாடுகள் மற்றும் ஏற்பாடுகள் தொடர்பாக […]