விம்பிள்டன் சாம்பியனுக்கு 4 ஆண்டு தடை மார்கெட்டா வொண்ட்ரௌசோவாவுக்கு அதிர்ச்சி தீர்ப்பு
டென்னிஸ் உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தும் வகையில் முன்னாள் விம்பிள்டன் சாம்பியனான மார்கெட்டா வொண்ட்ரௌசோவாவுக்கு நான்கு ஆண்டுகள் விளையாட்டுத் தடை விதிக்கப்பட்டுள்ளது.2023 ஆம் ஆண்டு விம்பிள்டன் மகளிர் ஒற்றையர் பட்டத்தை வென்று உலக டென்னிஸ் அரங்கில் பெரும் கவனம் பெற்றிருந்த வொண்ட்ரௌசோவா தற்போது சர்வதேச டென்னிஸ் உலகின் முக்கிய சர்ச்சைகளில் ஒன்றாக மாறியுள்ளார்.சர்வதேச டென்னிஸ் நேர்மை முகமை (ITIA) வெளியிட்ட தகவலின்படி போட்டிகளுக்கு வெளியே மேற்கொள்ளப்பட்ட ஊக்கமருந்து (டோப்பிங்) பரிசோதனையில் ஒத்துழைக்கத் தவறியதாக அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. […]
