அமெரிக்காவில் 3 இலட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு நாடுகடத்தல் அச்சுறுத்தல்
அமெரிக்காவில் நாடுகடத்தல் அச்சுறுத்தல், Temporary Protected Status திட்டத்தின் கீழ் பாதுகாப்பு பெற்று வாழ்ந்து வந்த 3 இலட்சத்துக்கும் மேற்பட்ட ஹெய்டி நாட்டவர்களின் பாதுகாப்பு காலம் முடிவடைந்துள்ளதால் அவர்கள் நாடுகடத்தப்படக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பைத் தொடர்ந்து இந்த நடவடிக்கைக்கு வழி திறக்கப்பட்டுள்ளது. இந்த TPS பாதுகாப்பு முடிவடைந்தவுடன் அமெரிக்க குடியேற்ற அமலாக்க அமைப்பான ICE சட்டபூர்வ பாதுகாப்பை இழந்த ஹெய்டி நாட்டவர்களை இலக்கு வைத்து நடவடிக்கைகளை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. […]
