Tag: Transitional Justice
வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான விசாரணைகள் உண்மையைக் கண்டறிதல் மற்றும் குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்பானவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதில் இலங்கையில் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் தொடர்ச்சியாக தோல்வியடைந்துள்ளதற்கான மிகத் தெளிவான அடையாளமாக யாழ்ப்பாணத்தின் செம்மணி–சித்துபாத்தி மனிதப்புதைகுழி மாறியுள்ளதாக சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டம் (ITJP) தெரிவித்துள்ளது. “செம்மணி மனிதப்புதைகுழி நாங்கள் இன்னமும் தேடிக்கொண்டிருக்கிறோம்” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள புதிய அறிக்கையில் பல ஆண்டுகளாக காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளின் நிலை குறித்து உண்மையை அறிய காத்திருக்கும் குடும்பங்களின் சாட்சியங்கள் […]
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சின் தெற்காசியா மற்றும் ஆப்கானிஸ்தான் பிரிவு அதிகாரிகளைச் சந்தித்து செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளார். இதன்போது செம்மணி அகழாய்வில் இதுவரை 380-க்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் இது இலங்கையில் இதுவரை கண்டறியப்பட்ட மிகப் பெரிய மனிதப் புதைகுழியாக கருதப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணும் பணிகளில் முன்னேற்றம் […]
பிரபாகரனின் மகனான சிறுவன் பாலச்சந்திரன் போரின் இறுதிக்கட்டத்தில் கொல்லப்பட்டிருந்தால் அது யுத்தக் குற்றமாகக் கருதப்பட்டு முறையான விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை இடம்பெற்ற இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் கீழான விதிகள் மற்றும் அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழான தீர்மானங்கள் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார். இதன்போது தமிழ் நாளிதழில் வெளியான செய்தியை சபையில் சுட்டிக்காட்டிய அவர் […]