இந்திய இராணுவத் தளவாடங்கள் இலங்கைக்கு வந்தடைந்தன
ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் பணிகளில் ஈடுபட்டு வரும் இலங்கை இராணுவத்தினரின் பயன்பாட்டிற்காக இந்திய இராணுவத்தால் வழங்கப்பட்ட விசேட இராணுவத் தளவாடப் பொருட்கள் மற்றும் உபகரணங்கள் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான சார்தா போர்க்கப்பல் மூலம் கொண்டு வரப்பட்டுள்ள இந்த உபகரணங்கள் எதிர்வரும் 16 ஆம் திகதி பாதுகாப்பு அமைச்சில் நடைபெறவுள்ள உத்தியோகபூர்வ நிகழ்வின் போது இலங்கை இராணுவத்திடம் முறைப்படி கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியக் கடற்படையின் சுகன்யா ரகத்தைச் சேர்ந்த கரையோர ரோந்துப் […]
