தேர்தல்களில் அழியாத மை பயன்பாடு நீக்கம்
இலங்கையில் நடைபெறும் தேர்தல்களின் போது வாக்காளர்களின் விரல்களில் அழியாத மை பயன்படுத்துவதற்கான சட்டப்பூர்வ கட்டாயத்தை நீக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவைத் தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். தேர்தல் நடைமுறைகளை நவீனமயப்படுத்துதல் மற்றும் தற்போதைய தேர்தல் நிர்வாக முறைகளுக்கு ஏற்ப சட்டங்களை புதுப்பித்தல் ஆகிய நோக்கங்களின் அடிப்படையில் இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த காலங்களில் ஒரே நபர் பலமுறை வாக்களிப்பதைத் தடுக்க அழியாத மை பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் […]
