உக்ரைன் போரில் பதற்றம் உச்சம் – மொஸ்கோவை குறிவைத்து உக்ரைன் தீவிர ட்ரோன் தாக்குதல் சீன கப்பலும் சேதம்
உக்ரைன் – ரஷ்யா போரில் புதிய கட்டமாக மொஸ்கோவை ஆழமாக குறிவைத்து உக்ரைன் மிகப்பெரிய ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோ மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நூற்றுக்கணக்கான ட்ரோன்கள் தாக்குதல் மேற்கொண்டதாகவும் இந்த தாக்குதல்களில் குறைந்தது நால்வர் உயிரிழந்ததுடன் விமான நிலைய சேவைகளும் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை ரஷ்யா உக்ரைனின் ஒடேசா துறைமுகப் பகுதிகளை நோக்கி மேற்கொண்ட தாக்குதல்களில் சீனாவுக்கு சொந்தமான சரக்கு கப்பல் ஒன்றும் சேதமடைந்துள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் கூறியுள்ளனர். […]
