பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறை தடுப்பு
விழாக்களில் பங்கேற்றவர்களிடம், பெரும்பாலும் கவனிக்கப்படாமல் போகும் துஷ்பிரயோக நடத்தைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தீங்கு விளைவிக்கக்கூடிய தங்கள் செயல்கள் குறித்து சிந்திக்குமாறும் பிரசாரம் வலியுறுத்தியது. இதன் மூலம் லட்சக்கணக்கான விழா பங்கேற்பாளர்களைச் சென்றடைய முடியும் என தெரிவிக்கப்பட்டது.
ஃபெஸ்டிவல் ரிப்பப்ளிக் நிறுவனத்துடன் இணைந்து அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. தேம்ஸ் வேலி காவல்துறை மற்றும் வெஸ்ட் யார்க்ஷயர் காவல்துறையும் இதில் பங்கேற்றுள்ளன.
அரசின் இலக்கு
பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறையை ஒரு தசாப்தத்தில் பாதியாகக் குறைப்பது அரசின் முக்கிய இலக்காகும். மார்ச் 2026-ல் முடிவடைந்த ஆண்டுக்கான சமீபத்திய மதிப்பீட்டின்படி, 16 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட சுமார் 10 லட்சம் பெரியவர்கள் பாலியல் பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர்.
பாதுகாப்பு மற்றும் பெண்கள் சிறுமிகளுக்கு எதிரான வன்முறை தடுப்பு அமைச்சர் சத்வீர் கவுர். இந்தப் பிரசாரம் சமூகத்தின் ஒவ்வொரு துறையிலும் மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாகும் என்றார். பெண்கள் மற்றும் சிறுமிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைவரும் பொறுப்பேற்க வேண்டும் என பெண்கள் மற்றும் சமத்துவங்களுக்கான அமைச்சர் பிரிட்ஜெட் பிலிப்சனும் வலியுறுத்தினார்.
ஃபெஸ்டிவல் ரிப்பப்ளிக் நிர்வாக இயக்குநர் மெல்வின் பென், பாதுகாப்பான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய விழா சூழலை உருவாக்குவது நிறுவனத்தின் முக்கிய நோக்கம் என்றார்.
தேம்ஸ் வேலி காவல்துறையின் தலைமை ஆய்வாளர் லாரா கோர்ஸ்காடன், சம்மதம் குறித்த திறந்த உரையாடல்கள் மற்றும் கல்வி, தடுப்பு நடவடிக்கைகளுக்கு முக்கியமானவை எனத் தெரிவித்தார்.
2024-ல் தேம்ஸ் வேலி காவல்துறையும் Breaking Barriers நிறுவனமும் உருவாக்கிய Consent Conversations பிரசாரமும் விழாக்களில் நடத்தப்பட்டது. பாலியல் வன்முறை விசாரணைக்கான சிறப்புக் குழுக்கள், குடும்ப வன்முறை பாதுகாப்பு உத்தரவுகளை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளையும் அரசு முன்னெடுத்து வருகிறது.
மேலும் தொடர்புடைய செய்திகளை Breaking News பகுதியில் பார்க்கலாம்.
மேலும் தொடர்புடைய செய்திகளை Breaking News பகுதியில் பார்க்கலாம்.






























