அரசியல்
நாடாளுமன்ற சலுகைகளாக எம்.பிக்கள் பெறும் கொடுப்பனவுகளை, அவற்றின் நோக்கமான பொதுமக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல், மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) வங்கிக் கணக்கில் வைப்புச் செய்துள்ளதாக அந்த அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.
இது 2023ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் குற்றமாகும் எனவும் அமைப்பு தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளது.
இந்த முறைப்பாடு இன்று (02) ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்பட்டதுடன், ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் துரித விசாரணை நடத்துமாறும் கோரப்பட்டுள்ளது.
முறைப்பாட்டில் ஐந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவற்றில், NPPயைச் சேர்ந்த 159 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அழைத்து வாக்குமூலங்களைப் பதிவு செய்தல், விசாரணை நடத்துதல் மற்றும் கட்சியின் வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்தல் ஆகியவையும் அடங்குகின்றன.






























