இங்கிலாந்தின் சுற்றுச்சூழல் முகமை (Environment Agency) மேற்கொண்ட விசாரணையில் County Durham பகுதியில் உள்ள Shotton Beck என்ற நீரோடையில் கட்டுமானப் பணிகளின்போது ஏற்பட்ட கழிவுநீர் அடைப்பு காரணமாக சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் வெளியேறி சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்பட்டது கண்டறியப்பட்டது. அதிகாரிகளின் தகவலின்படி கழிவுநீருடன் இறைச்சிக் கூடத்திலிருந்து வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும் இரத்தக் கழிவுகளும் கலந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தவிர்க்கக்கூடிய ஒன்றாக இருந்ததாக நீதிமன்றம் குறிப்பிட்டதுடன் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்றத் தவறியதற்காக Taylor Wimpey UK Ltd-க்கு £300,000 அபராதம் விதிக்கப்பட்டது.
இந்த தீர்ப்பு கட்டுமான நிறுவனங்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பொறுப்புகளை கடுமையாக கடைப்பிடிக்க வேண்டிய அவசியத்தை மீண்டும் வலியுறுத்துவதாக இங்கிலாந்து சுற்றுச்சூழல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
































