விவசாயம் மற்றும் நீர்ப்பாசனம்
உலக வங்கி நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் ஒருங்கிணைந்த கிராம-நகர அபிவிருத்தி மற்றும் காலநிலைத் தாங்குதிறன் திட்டத்தின் கீழ், இந்தப் பணிகளுக்காக 5.8 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. திட்டம் 2029ஆம் ஆண்டு வரை தொடரும்.
புனரமைக்கப்படும் 296 குளங்களில் 290, 18 மாவட்டங்களில் அமைந்துள்ளன. இவை டிட்வா சூறாவளியால் சேதமடைந்தவை. இவற்றின் புனரமைப்புக்காக திட்டத்தின் அவசரகால பதிலளிப்பு கூறின் கீழ் சுமார் 5.58 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட குளங்கள் அதிகம் உள்ள மாவட்டமாக பதுளை காணப்படுகிறது. அங்கு 97 குளங்கள் புனரமைக்கப்படுகின்றன. இரத்தினபுரியில் 29, மன்னாரில் 24, குருநாகலில் 19 குளங்கள் புனரமைக்கப்படுகின்றன. கண்டி மற்றும் வவுனியா மாவட்டங்களில் தலா 15 குளங்கள் புனரமைக்கப்படுகின்றன.
மேலும், பொலன்னறுவை, அம்பாந்தோட்டை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் உள்ள ஆறு சிறிய நீர்ப்பாசனக் குளங்களும் புனரமைக்கப்படுகின்றன. இதற்காக சுமார் 256.2 மில்லியன் ரூபாய் செலவிடப்பட உள்ளது.
இந்தத் திட்டம் நீர் சேமிப்புத் திறன் மற்றும் நீர்ப்பாசன செயல்திறனை மேம்படுத்தும் என விவசாய அபிவிருத்தித் திணைக்களம் தெரிவித்துள்ளது. வெள்ளம், வறட்சி உள்ளிட்ட காலநிலை தொடர்பான அபாயங்களுக்கு விவசாய சமூகங்களின் தாங்குதிறனையும் இது வலுப்படுத்தும்.






























