இவ்விபத்தில் தங்காலை நகர சபை செயலாளர் 12 நகர சபை பணியாளர்கள், இரண்டு குழந்தைகள் மற்றும் பஸ் டிரைவர் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 6 ஆண்கள், 5 பெண்கள், 3 ஆண் குழந்தைகள், 2 பெண் குழந்தைகள் என மொத்தம் 18 பேர் கடுமையாக காயமடைந்து பதுளை, பண்டாரவளை டியாத்தலாவ வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 30 பேர் பஸில் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விபத்துக்குக் காரணமான SUV வாகன ஓட்டுநர் கவனக்குறைவுக்காகவும், விபத்தைத் தடுக்க தவறியதற்காகவும் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, இலங்கை விமானப்படை சார்பில் Diyatalawa வில் MI-17 ஹெலிகாப்டர் மற்றும் Weerawila வில் Bell 412 ஹெலிகாப்டர் தயார் நிலையில் வைக்கப்பட்டன. அவசியமெனில் காயமடைந்தவர்களை கொழும்பு கொண்டு செல்லவோ அல்லது மீட்புப் பணிகளில் ஈடுபடவோ தயாராக இருந்ததாக விமானப்படை தெரிவித்துள்ளது.
மேலும், இலங்கை இராணுவ தளபதி லசந்த ரொட்ரிகோவின் உத்தரவின் பேரில், விஜயபாகு படைத்தளம், கெமுனு படைத்தளம் மற்றும் கமாண்டோ படைப்பிரிவு ஆகியவற்றைச் சேர்ந்த சுமார் 200 இராணுவ வீரர்கள் உடனடியாக மீட்புப் பணிகளில் இணைந்தனர். பள்ளத்தின் அடியில் நின்ற பஸிலிருந்து பாதிக்கப்பட்டவர்களை அரை கிலோமீட்டர் உயரத்திற்கு மேலே கொண்டு வருவது மிகக் கடினமாக இருந்த நிலையில், கமாண்டோ படையினர் கயிறு வழி மீட்பு முறைகள் மூலம் பணியை வெற்றிகரமாக நிறைவேற்றினர்.
மீட்புப் பணிகளில் இராணுவத்துடன் உள்ளூர் மக்கள் பெருமளவில் கலந்து கொண்டனர். அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சியால் இம்முறையீடு இன்று காலை வெற்றிகரமாக முடிவடைந்ததாக இராணுவம் அறிவித்துள்ளது.
இதேவேளை விபத்தில் உயிர் தப்பிய ஒருவர் பஸ் டிரைவர் விபத்துக்கு சில நிமிடங்களுக்கு முன்பே பிரேக் செயலிழந்ததாக கூறியிருந்தார் என ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். ஆனால், அப்போது பயணிகள் அதை கவனமாக எடுத்துக் கொள்ளவில்லை. பஸ் இரண்டாவது வளைவை எடுக்கும் போது பிரேக் செயலிழந்தது உறுதியாகத் தெரிய எதிரே வந்த வாகனத்துடன் மோதியதும் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்ததாக அவர் விளக்கினார்.
எல்ல போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.






























