September 9, 2026
Breaking News
கொலம்பியாவில் கடத்தப்பட்ட பிரெஞ்சு படையணி வீரர் தப்பியோட்டம் ஆப்பிளின் முதல் மடிக்கக்கூடிய ஐபோன்: இன்று வெளியாகுமா? திருட்டுக் கதைக்களம் கொண்ட படத்துக்கு இரண்டு தேசிய விருதுகள் ஜெர்மனியில் மின்கம்பி நாசவேலை சந்தேக நபர் கைது செயற்கை நுண்ணறிவு மனிதகுலத்தை அழிக்கலாம்: ஆய்வாளர் எச்சரிக்கை பாரிஸ் விண்வெளி உச்சி மாநாட்டில் போரின் புதிய பரிமாணம் மாவோ சேதுங் சீனாவின் ஆட்சியை கைப்பற்றிய வரலாறு நோர்வே மன்னர் ஹரால்ட் V-ன் இறுதிச்சடங்கு இன்று நடைபெறுகிறது ஸ்பெயினில் செய்தியாளர்களின் ‘கருப்புப் பட்டியல்’ விவகாரம்: ஊடகச் சுதந்திரம் குறித்து கடும் எதிர்ப்பு “இசை எனக்குள் அதுவாகவே வந்தது” என நெகிழ்ந்த இளையராஜா ஆங்கிலப் படங்களுக்கு இணையான முயற்சி: ‘சர்தார் 2’ குறித்து கார்த்தி பிரான்ஸில் 4 மாவட்டங்களுக்கு மழை-வெள்ள மஞ்சள் எச்சரிக்கை பிரான்ஸ் செனட் தேர்தலில் முதல்முறையாக குழு அமைக்க ஆர்.என். இலக்கு நோர்வே மன்னர் ஹரால்ட் V இறுதிச்சடங்கில் பிரான்ஸ் பிரதமர் பங்கேற்பு கிரெனோபிளில் போதைப்பொருள் பதுக்கல் வழக்கு: மூவர் நீதிமன்றத்தில் ஆஜர் கொலம்பியாவில் கடத்தப்பட்ட பிரெஞ்சு படையணி வீரர் தப்பியோட்டம் ஆப்பிளின் முதல் மடிக்கக்கூடிய ஐபோன்: இன்று வெளியாகுமா? திருட்டுக் கதைக்களம் கொண்ட படத்துக்கு இரண்டு தேசிய விருதுகள் ஜெர்மனியில் மின்கம்பி நாசவேலை சந்தேக நபர் கைது செயற்கை நுண்ணறிவு மனிதகுலத்தை அழிக்கலாம்: ஆய்வாளர் எச்சரிக்கை பாரிஸ் விண்வெளி உச்சி மாநாட்டில் போரின் புதிய பரிமாணம் மாவோ சேதுங் சீனாவின் ஆட்சியை கைப்பற்றிய வரலாறு நோர்வே மன்னர் ஹரால்ட் V-ன் இறுதிச்சடங்கு இன்று நடைபெறுகிறது ஸ்பெயினில் செய்தியாளர்களின் ‘கருப்புப் பட்டியல்’ விவகாரம்: ஊடகச் சுதந்திரம் குறித்து கடும் எதிர்ப்பு “இசை எனக்குள் அதுவாகவே வந்தது” என நெகிழ்ந்த இளையராஜா ஆங்கிலப் படங்களுக்கு இணையான முயற்சி: ‘சர்தார் 2’ குறித்து கார்த்தி பிரான்ஸில் 4 மாவட்டங்களுக்கு மழை-வெள்ள மஞ்சள் எச்சரிக்கை பிரான்ஸ் செனட் தேர்தலில் முதல்முறையாக குழு அமைக்க ஆர்.என். இலக்கு நோர்வே மன்னர் ஹரால்ட் V இறுதிச்சடங்கில் பிரான்ஸ் பிரதமர் பங்கேற்பு கிரெனோபிளில் போதைப்பொருள் பதுக்கல் வழக்கு: மூவர் நீதிமன்றத்தில் ஆஜர்
முகப்பு Breaking News செய்தி
Breaking News

எல்ல பஸ் விபத்தில் 15 பேர் உயிரிழப்பு – உயிர் தப்பியவரின் வாக்குமூலம்

📅 வெளியீடு: 05 Sep 2025 15:55 🔄 புதுப்பிப்பு: 05 Sep 2025 16:03 👤 Nerikkalam 👁 1 பார்வைகள்

எல்ல – வெல்லவாயை சாலையில் நேற்று (வியாழக்கிழமை) இரவு ஏற்பட்ட பஸ் விபத்தில் 15 பேர் உயிரிழந்ததுடன், 18 பேர் காயமடைந்துள்ளனர். தங்காலை பகுதியிலிருந்து சுற்றுலா பயணமாக எல்ல சென்ற குழுவினர் திரும்பிக் கொண்டிருந்தபோது அவர்கள் பயணித்த தனியார் பஸ் ஒரு ஜீப்புடன் மோதியதில் சுமார் 1000 அடி ஆழமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது.

இவ்விபத்தில் தங்காலை நகர சபை செயலாளர் 12 நகர சபை பணியாளர்கள், இரண்டு குழந்தைகள் மற்றும் பஸ் டிரைவர் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 6 ஆண்கள், 5 பெண்கள், 3 ஆண் குழந்தைகள், 2 பெண் குழந்தைகள் என மொத்தம் 18 பேர் கடுமையாக காயமடைந்து பதுளை, பண்டாரவளை டியாத்தலாவ வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 30 பேர் பஸில் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விபத்துக்குக் காரணமான SUV வாகன ஓட்டுநர் கவனக்குறைவுக்காகவும், விபத்தைத் தடுக்க தவறியதற்காகவும் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கை விமானப்படை சார்பில் Diyatalawa வில் MI-17 ஹெலிகாப்டர் மற்றும் Weerawila வில் Bell 412 ஹெலிகாப்டர் தயார் நிலையில் வைக்கப்பட்டன. அவசியமெனில் காயமடைந்தவர்களை கொழும்பு கொண்டு செல்லவோ அல்லது மீட்புப் பணிகளில் ஈடுபடவோ தயாராக இருந்ததாக விமானப்படை தெரிவித்துள்ளது.

மேலும், இலங்கை இராணுவ தளபதி லசந்த ரொட்ரிகோவின் உத்தரவின் பேரில், விஜயபாகு படைத்தளம், கெமுனு படைத்தளம் மற்றும் கமாண்டோ படைப்பிரிவு ஆகியவற்றைச் சேர்ந்த சுமார் 200 இராணுவ வீரர்கள் உடனடியாக மீட்புப் பணிகளில் இணைந்தனர். பள்ளத்தின் அடியில் நின்ற பஸிலிருந்து பாதிக்கப்பட்டவர்களை அரை கிலோமீட்டர் உயரத்திற்கு மேலே கொண்டு வருவது மிகக் கடினமாக இருந்த நிலையில், கமாண்டோ படையினர் கயிறு வழி மீட்பு முறைகள் மூலம் பணியை வெற்றிகரமாக நிறைவேற்றினர்.

மீட்புப் பணிகளில் இராணுவத்துடன் உள்ளூர் மக்கள் பெருமளவில் கலந்து கொண்டனர். அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சியால் இம்முறையீடு இன்று காலை வெற்றிகரமாக முடிவடைந்ததாக இராணுவம் அறிவித்துள்ளது.

இதேவேளை விபத்தில் உயிர் தப்பிய ஒருவர் பஸ் டிரைவர் விபத்துக்கு சில நிமிடங்களுக்கு முன்பே பிரேக் செயலிழந்ததாக கூறியிருந்தார் என ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். ஆனால், அப்போது பயணிகள் அதை கவனமாக எடுத்துக் கொள்ளவில்லை. பஸ் இரண்டாவது வளைவை எடுக்கும் போது பிரேக் செயலிழந்தது உறுதியாகத் தெரிய எதிரே வந்த வாகனத்துடன் மோதியதும் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்ததாக அவர் விளக்கினார்.

எல்ல போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சுவாரஸ்யமான செய்திகள்
இது தொடர்பான செய்திகள்
பரிந்துரைக்கப்பட்ட செய்திகள்
பிரான்ஸ் செய்திகள்
இலங்கை செய்திகள்
இலங்கையின் முக்கிய நீர்த்தேக்கத்தில் குறைந்த நீர்மட்டம்
இலங்கையின் முக்கிய நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் 34% மட்டுமே
08 Sep 2026
இலங்கை அரசுப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் வேலைநிறுத்தம்
அரசுப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் 09ஆம் தேதி ஒருநாள் வேலைநிறுத்தம்
08 Sep 2026
இலங்கையில் செயல்படும் லங்கா சதொச விற்பனை நிலையம்
2024-2025 காலகட்டத்தில் 31 சதொச கிளைகள் மூடல்
08 Sep 2026
இலங்கை நாடாளுமன்றத்தில் ஊடக நிபுணர்கள் நிறுவன மசோதா தொடர்பான அறிவிப்பு
ஊடக நிபுணர்கள் நிறுவன மசோதா தொடர்பில் உச்சநீதிமன்றத் தீர்மானம்
08 Sep 2026
முல்லைத்தீவு புதுமாத்தளன் கடற்கரையில் பறிமுதல் செய்யப்பட்ட மீன் தொகை
முல்லைத்தீவில் வெடிபொருள் பயன்படுத்திப் பிடித்ததாகக் கூறப்படும் 3,200 கிலோ மீன் பறிமுதல்; பெண் கைது
08 Sep 2026
கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்ட குஷ் மற்றும் ஹஷிஷ் போதைப்பொருட்கள்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ.5.13 கோடி போதைப்பொருளுடன் இரு தாய்லாந்து நாட்டவர்கள் கைது
08 Sep 2026
இலங்கை 22ஆவது அரசியலமைப்பு திருத்தம் குறித்து அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தியின் விளக்கம்
22ஆவது திருத்தம் குறித்து ஜனாதிபதி பேச்சு: அமைச்சர் விளக்கம்
08 Sep 2026
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கை அதிகாரப்பூர்வ பயணம்
இலங்கை வரும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்
08 Sep 2026
சினிமா செய்திகள்

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading