இனி பழைய வடிவிலான காகிதச் சான்றிதழ்கள், புகைப்பட நகல்கள், ஸ்கேன் பிரதிகள் அல்லது மென்பொருள் வழியாக உருவாக்கப்பட்ட சான்றிதழ்கள் அனைத்தும் செல்லாதவை எனக் கருதப்பட்டு Assurance Maladie (சுகாதார காப்பீட்டு நிறுவனம்) மூலம் நிராகரிக்கப்படும்.
இனி இருந்து மருத்தவர்கள் வழங்கும் காகிதச் சான்றிதழ்கள் சிறப்பு பாதுகாப்பு அம்சங்களைக் கொண்ட புதிய Cerfa படிவம் மூலம் மட்டுமே வழங்கப்பட வேண்டும். இந்த புதிய படிவத்தில் 7 விதமான பாதுகாப்பு குறியீடுகள் உள்ளன – ஹோலோகிராம் ஸ்டிக்கர், காந்த மை, சிறப்பு காகிதம், மருத்துவரின் அடையாளக் குறியீடு, QR குறியீடு போன்றவை.
இதன் நோக்கம் போலி மருத்துவச் சான்றிதழ்களை தடுப்பதும், சமூக வலைதளங்களில் விற்பனை செய்யப்படும் போலி ஆவணங்களை முற்றிலும் தடுப்பதும் ஆகும்.
அரசாங்கத் தகவலின்படி, 2024-ஆம் ஆண்டு மட்டும் 42 மில்லியன் யூரோக்கள் அளவிலான மோசடிகள் மருத்துவச் சான்றிதழ்களுடன் தொடர்புடையதாக கண்டறியப்பட்டுள்ளன. இது 2023-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இருமடங்கு அதிகரித்துள்ளது.
இதை கட்டுப்படுத்தும் வகையில், ஜூலை 1, 2025 முதல் புதிய Cerfa படிவம் கட்டாயமாக அறிவிக்கப்பட்டிருந்தாலும், மருத்தவர்கள் பழகிக் கொள்ள சில மாதங்கள் தளர்வு அளிக்கப்பட்டது. அந்த தளர்வு ஆகஸ்ட் 31-ம் தேதி முடிவடைகிறது.
செப்டம்பர் 1-ம் தேதி முதல், பாதுகாப்பான புதிய Cerfa படிவம் அல்லது AmeliPro மூலமாக ஆன்லைன் டெலிடிரான்ஸ்மிஷன் மூலம் அனுப்பப்படும் சான்றிதழ்கள் மட்டுமே செல்லுபடியாகும். பழைய படிவங்கள் வந்தால், அவை மருத்தவரிடம் திருப்பி அனுப்பப்படும் மேலும் நோயாளிக்கும் தகவல் அனுப்பப்படும்.
அதாவது, இனி நோயாளிகளும், மருத்தவர்களும் இந்த புதிய நடைமுறையை பின்பற்றுவது மிகவும் அவசியம். இது போலி மருத்துவச் சான்றிதழ் மூலம் ஏற்படும் காப்பீட்டு மோசடிகளை கட்டுப்படுத்துவதற்கான ஒரு பெரிய முன்னேற்றமாக கருதப்படுகிறது.




























