சாலை பாதுகாப்பை உறுதிசெய்யும் நோக்கில் எடுக்கப்பட்ட இந்த முடிவு “மிகவும் கடுமையானது” என கூறப்படுகிறது.
லாண்ட்ஸ் மாகாண ஆட்சியர் கில்லஸ் கிளாவ்ரூவெல் (Gilles Clavreul) தெரிவித்ததாவது:
“இந்த ஆண்டு ஜனவரி முதல் இதுவரை 3,200 பேர் மொபைல் பயன்படுத்தியதற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளனர். இந்த போக்கு அதிகரித்து வருகிறது. எனவே இனி குற்றச்செயல்களின் சேர்க்கையை காத்திருக்காமல், நேரடியாக டிரைவரின் உரிமத்தை தற்காலிகமாக இடைநிறுத்துவோம்” என்றார்.
தற்போதைய சட்டப்படி, வாகனம் ஓட்டும் போது மொபைல் போன் பயன்படுத்துவது €135 (யூரோ) அபராதத்திற்கும், லைசன்ஸில் 3 புள்ளிகள் குறைப்பிற்கும் வழிவகுக்கிறது.
ஆனால், லாண்ட்ஸ் மாகாணத்தின் இந்த புதிய முயற்சி வெற்றிகரமாக இருந்தால், இதே மாதிரி நடவடிக்கை Maine-et-Loire உள்ளிட்ட பிற பகுதிகளிலும் விரைவில் அமல்படுத்தப்படலாம் என தகவல்.
சாலை பாதுகாப்புத் துறையின் புள்ளிவிவரங்களின்படி, 2023ஆம் ஆண்டு மட்டும் 4,74,949 பேர் மொபைல் பயன்படுத்தியதற்காக பிடிபட்டுள்ளனர். மொபைல் போன் பயன்படுத்துவது சாலை விபத்திற்கான அபாயத்தை மூன்று மடங்கு அதிகரிக்கிறது என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.





























