யாத்ரீகர்கள் வருவதற்கு பல மாதங்களுக்கு முன்பே சேவைகளின் தயார்நிலையை மேம்படுத்தவும் ஏற்பாடுகளை சீர்படுத்தவும் மேற்கொள்ளப்படும் தொடர் முயற்சிகளின் ஒரு பகுதியாக இது அமைந்துள்ளது. 2026 ஹஜ் பருவத்திற்கான ஏற்பாடுகள் 2025 ஜூன் 8 (12 து அல் ஹிஜ்ஜா 1446 AH) முதல் தொடங்கியுள்ளன.
ஆரம்பகட்டத்தில் உலகளாவிய ஹஜ் விவகார அலுவலகங்களுக்கு திட்டமிடல் ஆவணங்கள் வழங்கப்பட்டு நஸ்க் மசார் டிஜிட்டல் தளம் மூலம் புனிதத் தலங்களிலுள்ள முகாம்கள் தொடர்பான விரிவான தகவல்களுக்கும் அணுகல் வழங்கப்பட்டது. அறிவிக்கப்பட்ட அட்டவணையின்படி தங்குமிடம் மற்றும் முக்கிய சேவைகளுக்கான ஆயத்த ஒப்பந்தங்கள் ரபி அல் அவ்வல் 1447 AH இல் தொடங்கும் அக்டோபர் 12, 2025 அன்று ஆயத்தக் கூட்டங்கள் செயல்பாட்டு தரவு இறுதிப்படுத்தல் மற்றும் யாத்ரீகர் பதிவு திறப்பதற்கான காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
2026 தொடக்கத்தில் மெக்கா மற்றும் மதீனாவில் தங்குமிடம் போக்குவரத்து மற்றும் புனிதத் தலங்களில் தேவையான சேவைகளுக்கான ஒப்பந்தங்கள் ஜனவரியில் நிறைவு பெறும். அதனைத் தொடர்ந்து பிப்ரவரி 8 முதல் விசா வழங்கல் தொடங்கி மார்ச் மாதத்தில் விசாக்கள் இறுதிப்படுத்தப்படும்.
யாத்ரீகர்களின் முதல் குழுக்கள் ஏப்ரல் 18, 2026 (1 து அல் கதா 1447 AH) முதல் சவுதி அரேபியாவிற்கு வருவார்கள். இதுவரை சுமார் 7.5 லட்சம் யாத்ரீகர்கள் பதிவு செய்துள்ளதாகவும் நஸ்க் மசார் மற்றும் மின்னணு பணப்பைகள் மூலம் நிதி மற்றும் ஒப்பந்த செயல்முறைகள் வெளிப்படையாகவும் வேகமாகவும் நடைபெறுகின்றன என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது. பாதுகாப்பான திறமையான மற்றும் கண்ணியமான ஹஜ் யாத்திரையை உறுதி செய்ய அறிவிக்கப்பட்ட காலக்கெடுவை அனைவரும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

































