குழந்தைகளின் சாதாரண படங்களைத் தவறாக மாற்றும் ஆபத்து
முன்னதாக, குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதை காட்டும் உண்மையான புகைப்படங்கள் அல்லது காணொளிகளே இத்தகைய பதிவுகளாக இருந்தன. தற்போது, செயற்கை நுண்ணறிவின் வேகமான வளர்ச்சியால், குழந்தைகளின் சாதாரண படங்களையும் குற்றவாளிகள் மாற்றி அமைத்து AI-generated child sexual abuse material உருவாக்க முடியும் என காவல்துறை கூறியுள்ளது.
இவ்வாறு உருவாக்கப்படும் பதிவுகள் மிகவும் உண்மையானதாகவும், பாலியல் ரீதியாக வெளிப்படையானதாகவும் அல்லது துஷ்பிரயோகத்தை வெளிப்படுத்துவதாகவும் தோன்றலாம். AI-generated child sexual abuse material குழந்தைகளின் தனியுரிமை, கண்ணியம், உணர்ச்சி நலன் மற்றும் மனநலத்திற்கு தீவிர அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என காவல்துறை எச்சரித்துள்ளது.
குழந்தை இணையத்தில் அச்சுறுத்தல் அல்லது கையாளுதலுக்கு உள்ளாகிறதா என்பதற்கான அறிகுறிகளில் பெற்றோரும் பராமரிப்பாளர்களும் கவனம் செலுத்த வேண்டும் என இலங்கை காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. குடும்பங்கள் குழந்தைகளைப் பாதுகாக்க முன்கூட்டியே நடவடிக்கைகளை மேற்கொண்டு, அவர்களுக்கான பாதுகாப்பான இணையச் சூழலை உருவாக்க வேண்டும்.
தொழில்நுட்பம் தொடர்ந்து மாறும் நிலையில், பெற்றோரும் பராமரிப்பாளர்களும் விழிப்புடனும், தகவலறிந்தவர்களாகவும், செயலூக்கத்துடனும் இருக்க வேண்டும். டிஜிட்டல் காலத்தில் குழந்தைகளைப் பாதுகாப்பது விழிப்புணர்விலிருந்தே தொடங்குகிறது என்று காவல்துறை குறிப்பிட்டுள்ளது.































