ஜெர்மனி, ஆஸ்திரியா, கிரீஸ், டென்மார்க் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் வெள்ளிக்கிழமை டென்மார்க்கில் நடைபெற்ற கூட்டத்தில், திருப்பி அனுப்பும் மையங்கள் தொடர்பான ஒப்பந்தத்துக்கான நடைமுறை நடவடிக்கைகளில் உடன்பட்டதாக தெரிவித்தன. இந்த மையங்களை எந்த நாடுகள் அமைக்கலாம் என்பது குறித்து அவர்கள் பெயர்களை வெளியிடவில்லை.
மனித உரிமைகள் குறித்த கவலைகள்
இந்த ஐந்து நாடுகளின் குழு செப்டம்பர் இறுதியில் ஜெர்மனியின் முனிச்சில் மீண்டும் கூடவுள்ளது. ஜெர்மனி உள்துறை அமைச்சர் அலெக்சாண்டர் டோப்ரிண்ட், மூன்றாம் நாடுகளுடன் இந்த ஆண்டுக்குள் ஒப்பந்தம் எட்டுவதன் மூலம் திருப்பி அனுப்பும் மையங்களை உருவாக்க முடியும் என்றார்.
ஐரோப்பிய நாடாளுமன்றம் ஜூன் மாதம் குடியேற்றக் கொள்கையில் மாற்றங்களை ஏற்றுக்கொண்டது. இதன் மூலம் நாடுகடத்தல் நடவடிக்கைகளை விரைவுபடுத்தவும், வெளிநாடுகளில் மையங்களை அமைக்கவும் வழிவகுக்கிறது. ஆனால், ஐரோப்பிய கவுன்சில் ஜூலை மாதம் இத்தகைய EU migrant return hubs மூலம் மனித உரிமைகளுக்கு கணிசமான ஆபத்துகள் ஏற்படலாம் என எச்சரித்தது.
டென்மார்க் அகதிகள் கவுன்சில், ஐரோப்பிய ஒன்றியத்தின் குடியேற்றம் மற்றும் புகலிட ஒப்பந்தத்தை முதலில் செயல்படுத்த வேண்டும் எனக் கூறியது. டென்மார்க் அமைச்சர் மோர்டன் போட்ஸ்கோவ், 2027 இறுதிக்குள் திருப்பி அனுப்பும் மையத்துக்கு புலம்பெயர்ந்தோரை அனுப்பத் தயாராக இருப்போம் என்றார். ஐ.நா. அகதிகள் அமைப்பு, இந்த முன்மொழிவு குறித்த விவரங்கள் தங்களிடம் சமர்ப்பிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளது.































