ஒவ்வொரு பெற்றோரும் தங்களது வருமானம் குழந்தை பராமரிப்பு நேரம், செலவு மற்றும் பயன்படுத்தும் childminder அல்லது வீட்டில் பராமரிப்பு ஊழியர் அடிப்படையில் தனித்தனியாக கணக்கிடப்பட்ட தொகையைப் பெற முடியும்.
ஆனால் இந்த புதிய விதி crèche அல்லது micro-crèche போன்ற நிறுவனம் சார்ந்த பராமரிப்பை பயன்படுத்தும் குடும்பங்களுக்கு பொருந்தாது. இரு பெற்றோரும் தனித்தனியாக வேலை ஒப்பந்தம் செய்து மாதந்தோறும் பராமரிப்பு நேரம் மற்றும் சம்பளத்தை Urssaf/Pajemploi மூலம் அறிவிக்க வேண்டும். பிரிந்திருந்த பெற்றோருக்கு பராமரிப்பு செலவில் சமநிலை ஏற்படுத்தும் நோக்கில் இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.





























