வெளியான தகவல்களின்படி வளைகுடாவிற்குள் நுழையும் கப்பல்களுக்கான புதிய கடற்பாதையை ஈரான் நிர்வகிப்பதையும் வெளியேறும் கப்பல்களுக்கான பாதையை ஓமான் நிர்வகிப்பதையும் உள்ளடக்கிய திட்டம் குறித்து இரு நாடுகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இருப்பினும் இந்த ஒப்பந்தத்தின் இறுதி அம்சங்கள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
இந்த முயற்சி வெற்றியடைந்தால் அண்மைய மத்திய கிழக்கு பதற்றத்தால் பாதிக்கப்பட்ட ஹோர்முஸ் நீரிணை வழியாக சர்வதேச கப்பல் போக்குவரத்து மீண்டும் சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் கப்பல்களுக்கு கட்டணம் விதிப்பது உள்ளிட்ட சில அம்சங்களில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கருத்து வேறுபாடுகள் தொடர்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலகின் கடல்வழி எண்ணெய் வர்த்தகத்தின் சுமார் ஐந்தில் ஒரு பகுதி ஹோர்முஸ் நீரிணை வழியாக நடைபெறுவதால் இந்த பேச்சுவார்த்தையின் முடிவு உலகளாவிய எரிசக்தி சந்தை மற்றும் சர்வதேச வர்த்தகத்திற்கு முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
































