இதனுடன் அவிசாவளை–ஹட்டன்–நுவரெலியா வீதி நாவலப்பிட்டி–கினிகத்தேன வீதி தண்டகல–பாலம்பிட்டிய–டோலஸ்பாகே வீதி, மாவனல்லை–ஹெம்மாதகம–கம்பொல வீதி மற்றும் யட்டியாந்தோட்டை–பூனாகலை வீதி உள்ளிட்ட பல முக்கிய வீதிகளும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. பொதுமக்கள் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு மாற்று வழித்தடங்களை பயன்படுத்துமாறும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
முக்கிய வீதிகள் தற்காலிகமாக மூடப்பட்டன
மோசமான வானிலை, நாட்டில் நிலவும் கடுமையான மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக பல பகுதிகளில் உள்ள முக்கிய வீதிகள் வாகனப் போக்குவரத்திற்காக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை (RDA) தெரிவித்துள்ளது. பாதுகாப்பு காரணங்களால் கொழும்பு–கண்டி பிரதான வீதியின் கடுகன்னாவ பிரிவில் இன்று பிற்பகல் முதல் அனைத்து வாகனங்களின் போக்குவரத்தும் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளதாக RDA பணிப்பாளர் நாயகம் பொறியாளர் அனுராதா ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.


































