இந்த நிகழ்வு கொழும்பில் உள்ள மாலத்தீவு உயர்ஸ்தானிகராலயத்தில் இடம்பெற்றதுடன், தேசிய அவசர நிலை காலத்தில் இலங்கைக்கு மாலத்தீவு வழங்கிய துரித உதவி மற்றும் ஒற்றுமையை அங்கீகரிக்கும் வகையில் இந்த பாராட்டு வழங்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உதவுவதற்காக மாலத்தீவு அரசாங்கமும் மக்களும் ஒன்றிணைந்து 2 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான நிதியுதவியை வழங்கியமை இந்நிகழ்வில் நினைவுகூரப்பட்டது.
ஹப் பாயிண்ட் குளோபல் நிறுவனத்தின் பிரதிநிதிகளான துசித் முத்துமாலா மற்றும் தாசிம் ரஃபி ஆகியோர் இந்த பாராட்டு அடையாளத்தை உயர்ஸ்தானிகரிடம் வழங்கியதுடன், மாலத்தீவு உயர்ஸ்தானிகராலயத்தின் ஆலோசகர்கள் இம்ரான் அகமத் மற்றும் அலி ஷரீப் ஆகியோரும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இலங்கையின் தேவைக்காலத்தில் மாலத்தீவு வெளிப்படுத்திய இரக்கம், ஒத்துழைப்பு மற்றும் பிராந்திய ஒற்றுமைக்கு நன்றி தெரிவிக்கும் இந்த முயற்சி, இரு அண்டை நாடுகளுக்கிடையிலான வலுவான இருதரப்பு உறவுகளையும் மேலும் வலுப்படுத்துவதாக ஹப் பாயிண்ட் குளோபல் தெரிவித்துள்ளது.






























