மேலும் விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்கள் நேற்று (09) முதல் மீண்டும் பல்கலைக்கழக விடுதிகளுக்குத் திரும்ப அனுமதிக்கப்பட்டதாகவும் துணைவேந்தர் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் நிலவிய கடும் மழை மற்றும் வெள்ள நிலைமையால் மகாவலி கங்கை பகுதியில் அமைந்துள்ள பேராதனைப் பல்கலைக்கழகத்தின் “சரசவி மெதுர” விடுதியின் கீழ்தளத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருந்தது.
இதனால் அங்கு தங்கியிருந்த மாணவர்கள் பாதுகாப்பு கருதி வெளியேற்றப்பட்டிருந்த நிலையில் நிலைமை சீரடைந்ததைத் தொடர்ந்து கல்வி நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.





























