Tag: Floods
பேராதனை பல்கலைக்கழகம், சீரற்ற வானிலை காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அனைத்து கல்வி நடவடிக்கைகளும் இன்று (10) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக துணைவேந்தரும் சிரேஷ்ட பேராசிரியருமான தெரன்ஸ் மதுஜித் தெரிவித்துள்ளார். இதன்படி கடந்த ஓகஸ்ட் 3ஆம் திகதி முதல் நிறுத்தப்பட்டிருந்த கல்வி நடவடிக்கைகள் வழமைக்குத் திரும்பியுள்ளன. மேலும் விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்கள் நேற்று (09) முதல் மீண்டும் பல்கலைக்கழக விடுதிகளுக்குத் திரும்ப அனுமதிக்கப்பட்டதாகவும் துணைவேந்தர் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் நிலவிய கடும் மழை மற்றும் வெள்ள […]
Myanmar News,மியான்மாரில் தொடரும் வன்முறை மற்றும் மனிதாபிமான நெருக்கடியிலிருந்து தப்பிச் செல்ல முயன்ற ரோஹிங்கியா அகதிகளை ஏற்றிச் சென்ற இரண்டு படகுகள் கடலில் மாயமானதைத் தொடர்ந்து 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர் ஆணையம் (UNHCR) மற்றும் சர்வதேச குடியேற்ற அமைப்பு (IOM) இணைந்து வெளியிட்ட அறிக்கையின்படி ஜூன் மாத இறுதியில் மியான்மரின் ரகைன் மாநிலத்திலிருந்து புறப்பட்ட இரண்டு படகுகளே இந்த பேரிடரில் சிக்கியுள்ளன. முதல் படகில் சுமார் 250 […]
Weather Report,காலநிலை மாற்றத்தால் உருவாகும் புதிய சவால்களை எதிர்கொள்ள இலங்கையின் தற்போதைய பேரிடர் தயார்நிலை போதுமான அளவில் இல்லை என பேரிடர் முகாமைத்துவ மையம் (DMC) எச்சரிக்கை விடுத்துள்ளது.அதிகரித்து வரும் தீவிர மழை, வெள்ளம், மண்சரிவு, கடும் காற்று மற்றும் பிற இயற்கை அனர்த்தங்களின் தாக்கங்களை சமாளிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் அவசர செயற்பாட்டு திட்டங்களை மேலும் வலுப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பேரிடர் முகாமைத்துவ மையத்தின் அதிகாரிகள் தெரிவிப்பதாவது காலநிலை மாற்றத்தின் தாக்கம் எதிர்காலத்தில் […]
மக்களின் உயிரும் வாழ்வாதாரங்களும் ஆபத்தில் இருக்கும் இந்த காலகட்டத்தில், ஆளுங்கட்சி–எதிர்க்கட்சி என்ற அரசியல் வேறுபாடுகளை மறந்து “இலங்கை” என்ற ஒரே தரப்பாக அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தலைமையில் செவ்வாய்க்கிழமை (30) நடைபெற்ற தேசிய அனர்த்த முகாமைத்துவ சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் காலநிலை சவால்களை எதிர்கொள்ளும் வகையில் விரிவான மூலோபாய கொள்கை முன்மொழிவுகளையும் சமர்ப்பித்தார். 2026–2027 எல் நினோ சுழற்சி கடுமையான வறட்சி […]
எல் நினோ காலநிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய வறட்சி, வெள்ளம் உள்ளிட்ட இயற்கை அனர்த்தங்களின் தாக்கத்தை குறைக்கும் நோக்கில் தேசிய மட்டச் செயற்பாட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக விசேட அமைச்சரவை உபகுழுவொன்றையும் அதனை ஒருங்கிணைத்து செயல்படுத்த அதிகாரிகள் குழுவொன்றையும் நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. காலநிலை மாற்றத்தால் விவசாயம் நீர்வள முகாமைத்துவம் உணவுப் பாதுகாப்பு மற்றும் மக்களின் வாழ்வாதாரம் ஆகிய துறைகளில் ஏற்படக்கூடிய பாதிப்புகளை முன்கூட்டியே எதிர்கொள்வதற்கான திட்டங்கள் இந்த செயற்பாட்டுத் திட்டத்தின் கீழ் […]