Tag: University News
பேராதனை பல்கலைக்கழகம், சீரற்ற வானிலை காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அனைத்து கல்வி நடவடிக்கைகளும் இன்று (10) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக துணைவேந்தரும் சிரேஷ்ட பேராசிரியருமான தெரன்ஸ் மதுஜித் தெரிவித்துள்ளார். இதன்படி கடந்த ஓகஸ்ட் 3ஆம் திகதி முதல் நிறுத்தப்பட்டிருந்த கல்வி நடவடிக்கைகள் வழமைக்குத் திரும்பியுள்ளன. மேலும் விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்கள் நேற்று (09) முதல் மீண்டும் பல்கலைக்கழக விடுதிகளுக்குத் திரும்ப அனுமதிக்கப்பட்டதாகவும் துணைவேந்தர் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் நிலவிய கடும் மழை மற்றும் வெள்ள […]
Innovation Partnership, இலங்கையில் புதுமை, தொழில்முனைவு மற்றும் ஆய்வு முடிவுகளை வர்த்தக ரீதியாக மேம்படுத்தும் நோக்கில் கொழும்புப் பல்கலைக்கழகம் மற்றும் இலங்கை கண்டுபிடிப்பாளர்கள் ஆணைக்குழு (SLIC) ஆகியவற்றுக்கு இடையில் முக்கியமான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்திடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் புதிய கண்டுபிடிப்புகளை நடைமுறைப் பயன்பாட்டிற்கும் தொழில் உலகிற்கும் கொண்டு செல்லும் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒத்துழைப்பின் மூலம் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள Innovation & Startup Incubator […]
பல்கலைக்கழக பகிடிவதை 2020 ஆம் ஆண்டு முதல் இதுவரை அரச பல்கலைக்கழகங்களில் இடம்பெற்ற பகிடிவதை சம்பவங்களால் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 106 பேர் காயமடைந்துள்ளதாக பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (22) நடைபெற்ற அமர்வில் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் இதனைத் தெரிவித்த அவர் இதே காலப்பகுதியில் பகிடிவதை தொடர்பாக 141 முறைப்பாடுகளும் கடுமையான காயங்கள் தொடர்பாக 93 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளதாக கூறினார். பகிடிவதை சம்பவங்களை விசாரிக்க பல்கலைக்கழக மட்டத்தில் 28 […]