2023 முதல் செயல்பட்டு வந்த சமூக ஆதரவு வலையமைப்பு தற்போது Social Patronage Coalition என்ற பெயரில் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணியில் ஏழு அரசு சாரா அமைப்புகள் இணைந்து தனிநபர்கள் மற்றும் சமூகங்களின் மூலம் புலம்பெயர்ந்தோரின் சமூக ஒருங்கிணைப்பை ஊக்குவிக்கும் திட்டங்களை முன்னெடுக்க உள்ளன. இந்த முயற்சிக்கு ஐரோப்பிய ஒன்றியம் நிதியுதவி வழங்குகிறது.
அதேவேளை, போலிஷ் மொழி அரசுச் சான்றிதழ் தேர்வுகளுக்கான அணுகலை எளிதாக்கும் வகையில் அரசு சட்டத் திருத்த வரைவை ஏற்றுக்கொண்டுள்ளது. ஒவ்வொரு தேர்வு அமர்விலும் பங்கேற்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச எண்ணிக்கை 20 இலிருந்து 30 ஆக உயர்த்தப்படவுள்ளது. மேலும், போலிஷ் மொழியை வெளிநாட்டு மொழியாக கற்பித்த அனுபவமுள்ள பல்கலைக்கழக பட்டதாரிகளும் தேர்வாளர்களாக பணியாற்ற அனுமதிக்கப்படவுள்ளனர்.
இந்த மாற்றம் நீண்டகால ஐரோப்பிய ஒன்றிய குடியிருப்பு அனுமதி போலந்து குடியுரிமை மற்றும் கல்வி நோக்கங்களுக்குத் தேவையான B1 நிலை மொழிச் சான்றிதழுக்கான அதிகரித்துள்ள தேவையை கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மொழித் தேர்வில் பங்கேற்போர் எண்ணிக்கை 2017 ஆம் ஆண்டில் 2,800 ஆக இருந்த நிலையில், 2025 ஆம் ஆண்டில் அது 27,000 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 2025 ஆம் ஆண்டில் சுமார் 3,25,300 புலம்பெயர்ந்த குழந்தைகள் மாதம் PLN 800 வழங்கப்படும் 800+ குழந்தைகள் உதவித்தொகையை பெற்றுள்ளனர். இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 6.5% குறைவாக இருந்தாலும் இந்தத் திட்டத்திற்காக PLN 3.2 பில்லியனுக்கும் அதிகமான தொகை செலவிடப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.





























