இதில், வசிப்பிட சட்டங்களை மீறியவர்கள் 12,252 பேர், சட்டவிரோதமாக எல்லை கடக்க முயன்றவர்கள் 4,384 பேர், தொழிலாளர் விதிமுறைகளை மீறியவர்கள் 3,154 பேர் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
சட்டவிரோதமாக இராச்சியத்திற்குள் நுழைய முயன்ற 1,661 பேரில் 54% எத்தியோப்பியர்கள், 45% யேமன் நாட்டினர், 1% பிற நாட்டினர் என அறிக்கை தெரிவிக்கிறது. மேலும் 49 பேர் சவுதியிலிருந்து அண்டை நாடுகளுக்குள் நுழைய முயற்சித்தபோது தடுப்புக்குள் கொண்டுவரப்பட்டனர். மீறுபவர்களை தங்கவைத்தலும் கொண்டு செல்வதிலும் ஈடுபட்ட 15 பேர் தனியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
சவுதி உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்து, சட்டவிரோத நுழைவிற்கு உதவுபவர்களுக்கு அதிகபட்சம் 15 ஆண்டுகள் சிறை, 1 மில்லியன் ரியால் அபராதம், மேலும் தொடர்புடைய வாகனங்கள் மற்றும் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என தெரிவித்துள்ளது.
மக்கா மற்றும் ரியாத் பகுதிகளில் 911, பிற பகுதிகளில் 999 அல்லது 996 என்ற இலவச எண்களுக்கு அழைத்து சந்தேகத்திற்குரிய மீறல்கள் குறித்து பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

































