இலங்கையின் வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், தாய்லாந்தின் தொழிலாளர் அமைச்சர் ஜுலாபுன் அமோர்ன்விவாட் ஆகியோர் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர்.
தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாக்கும் ஒப்பந்தம்
தாய்லாந்து அமைச்சரவை, அந்நாட்டின் தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்க, நடைமுறையில் உள்ள சட்டக் கட்டமைப்பின் கீழ் ஆரம்பமாக 10,000 இலங்கைத் தொழிலாளர்களை ஆட்சேர்ப்பு செய்ய ஒப்புதல் அளித்துள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம், தொழிலாளர் கொள்கைகள் மற்றும் நடைமுறைகள், தொழிலாளர் சந்தைத் தகவல்கள், திறன் மேம்பாடு, உற்பத்தித்திறன் மற்றும் தொழிலாளர் பாதுகாப்பு ஆகிய துறைகளில் ஒத்துழைப்புக்கான கட்டமைப்பை வழங்குகிறது. சட்டவிரோத ஆட்சேர்ப்பு மற்றும் மனிதக் கடத்தலைத் தடுப்பதும் இதில் அடங்கும்.
மேலும், தாய்லாந்தில் பணியாற்றும் இலங்கைத் தொழிலாளர்களின் உரிமைகள், நலன் மற்றும் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்வதே முக்கிய நோக்கமாகும். இதன் மூலம் Sri Lankan workers in Thailand தொடர்பான தொழிலாளர் நகர்வு பாதுகாப்பானதாகவும், ஒழுங்குபடுத்தப்பட்டதாகவும், இரு நாடுகளுக்கும் பயனுள்ளதாகவும் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கைத் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கியதற்காக தாய்லாந்து அரசுக்கு அமைச்சர் விஜித ஹேரத் நன்றி தெரிவித்தார்.





























