Tag: மூதூர்
சம்பூரில் காணாமல் போனோர், திருகோணமலை மாவட்டத்தின் சம்பூர் பகுதியில் கடந்த காலங்களில் காணாமல் போனவர்கள் தொடர்பான தகவல்களை சேகரித்து ஆவணப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. மூதூர் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட சம்பூர் பகுதியில் வியாழக்கிழமை (06) நடைபெற்ற இந்த பதிவுச் செயற்பாட்டில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். இதன்போது, கடந்த காலங்களில் காணாமல் போன தங்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்கள் தொடர்பான விபரங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அவர்கள் பதிவு செய்துள்ளனர். திருகோணமலை மாவட்ட அரசாங்க […]
மூதூரில் கோர விபத்து, மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தோப்பூர் ஜின்னாநகர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (02) மாலை இடம்பெற்ற கோர சாலை விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். திருகோணமலை மட்டக்களப்பு பிரதான வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் ரிப்பர் வாகனத்துடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் மூதூர் கிளிவெட்டி பகுதியைச் சேர்ந்த தமிழ் செல்வன் தனேஸ் (21) மற்றும் அருணவன் செல்வரெத்தினம் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த இருவரில் ஒருவர் பல்கலைக்கழக மாணவராகவும் […]
மூதூர் மணற்சேனை படுகொலை யில் உயிரிழந்த 44 பொதுமக்களை நினைவுகூரும் 40வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று (16) உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. பெரும்பாலானோர் மென்கமம் கங்குவேலி மல்லிகைத்தீவு ஆகிய கிராமங்களிலிருந்து இடம்பெயர்ந்த பொதுமக்களே இவ்வாறு கொலை செய்யப்பட்டவர்கள். 1986 ஜூலை 16/18 அன்று உயிரிழந்த பொதுமக்களின் நினைவாக மூதூர் மணற்சேனை இந்து மயான முன்றலில் இந்த நிகழ்வு நடைபெற்றது. உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களே இந்நினைவேந்தல் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர். நிகழ்வின் போது உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்திக்காக ஒரு […]