Tag: Agriculture
விவசாயிகளின் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் எளிமையாக இருந்தபோதிலும், அவற்றை தீர்க்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அரசாங்கம் அடக்குமுறை போக்குடன் விவசாயிகளை நசுக்கி வருவதாக சர்வஜன அதிகாரம் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர குற்றஞ்சாட்டியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர் நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முதன்மை சக்தியாக விவசாயிகள் விளங்கினாலும் இன்று அவர்கள் கடுமையான பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டு வருவதாக தெரிவித்தார். விவசாய உற்பத்திக்குத் தேவையான உரம், விதைகள் மற்றும் ஏனைய உள்ளீடுகளின் […]
வடக்கு மாகாணத்தில் தூர்வாரப்பட வேண்டிய குளங்களை அடையாளம் கண்டு அவற்றின் புனரமைப்பு மற்றும் தூர்வாரும் பணிகளை விரைவாக முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விசேட கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. இதன்போது யாழ்ப்பாணம் வழுக்கையாற்றுப் பகுதியிலுள்ள குளங்களைத் தூர்வாரி அந்தப் பணிகளை சம்பந்தப்பட்ட உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டது. கடந்த ஆண்டு கந்தரோடைக் குளத்தில் மேற்கொள்ளப்பட்ட தூர்வாரும் திட்டத்தின் சாதகமான விளைவுகள் மற்றும் எதிர்கொண்ட சவால்கள் தொடர்பிலும் […]
நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்படாது என அரசு உறுதியளித்துள்ளது. அடுத்த மகா சாகுபடி பருவம் வரை போதுமான அரிசி கையிருப்பு இருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.தற்போது நெல் சந்தைப்படுத்தல் சபை வசம் சுமார் 140,000 மெட்ரிக் தொன் அரிசி கையிருப்பில் உள்ளது. எனவே சந்தை விநியோகத்தில் சிக்கல் ஏற்படாது என அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். மேலும் உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்ய மாற்று அரிசி வகைகளை இறக்குமதி செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் சந்தை நிலைத்தன்மையை பேண […]
இந்தியாவில் அத்தியாவசிய பொருட்களின் விலை நிலைத்தன்மை, விவசாய உற்பத்தி மற்றும் பொருளாதார வளர்ச்சி குறித்து பிரதமர் Narendra Modi முக்கிய கருத்துகளை வெளியிட்டுள்ளார். குறிப்பாக சமையல் எண்ணெய் இறக்குமதி சார்பை குறைக்கும் நடவடிக்கைகள் விவசாயிகளுக்கு உர விநியோகத்தை உறுதிப்படுத்தும் திட்டங்கள் மற்றும் தங்கத்தின் பொருளாதார பயன்பாடு தொடர்பாக அவர் விளக்கம் அளித்ததாக தெரிவிக்கப்படுகிறது. உலகளாவிய பொருளாதார சவால்கள் மற்றும் விலை உயர்வுகள் இந்தியாவையும் பாதித்துள்ள நிலையில் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் மக்களின் செலவுசுமையை குறைப்பதே அரசின் […]
உள்ளூர் உருளைக்கிழங்கு விவசாயிகளை பாதுகாக்க இலங்கை அரசு திட்டம் உள்ளூர் உருளைக்கிழங்கு விவசாயிகள் எதிர்கொள்ளும் சந்தைப்படுத்தல் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு வழங்கும் நோக்கில் இலங்கை அரசு திட்டம் அறிவித்துள்ளது. அதன் படி இன்று (10) முதல் உள்ளூர் உருளைக்கிழங்குகளை ஒரு கிலோக்கு ரூ.220 என்ற உத்தரவாத விலையில் அரசு கொள்முதல் செய்ய உள்ளது. நுவரெலியா பிளாக்பூல் பகுதியில் அமைந்துள்ள C/S நுவரெலியா வேளாண் கூட்டுறவு சங்க விற்பனை மையத்தில் இந்த நடவடிக்கை ஆரம்பமாகும். கூட்டுறவு மொத்த விற்பனை […]