கண்டி–யாழ்ப்பாணம் வீதியில் (A9) மஹையாவ சுரங்கப்பாதை நிர்மாணப் பணிகள் ஆரம்பம்
கண்டி நகரத்திற்கு பிரவேசிக்கும் பிரதான வீதிகளில் ஒன்றான கண்டி–யாழ்ப்பாணம் வீதி (A009) மஹையாவ பகுதியில் அமைக்கப்படவுள்ள சுரங்கப்பாதையின் நிர்மாணப் பணிகள் இன்று (06) முற்பகல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டன. வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் கீழ் 699.6 மில்லியன் ரூபா செலவில் மேற்கொள்ளப்படும் இந்த திட்டம், 273 நாட்களுக்குள் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திட்டத்தை நேரில் பார்வையிட்ட ஜனாதிபதி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடியதுடன் அங்கு கூடியிருந்த பொதுமக்களுடனும் சுமூகமாக உரையாடினார். இந்த நிகழ்வில் […]
