Tag: arrest
காலி பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது சுமார் 3,000 போதை மாத்திரைகள் மற்றும் ஒரு இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்துடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சட்டவிரோதமாக மருந்துப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் காலி காவல்துறையின் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் குறித்த வீட்டை சோதனையிட்டனர். இதன்போது பெருமளவிலான போதை மாத்திரைகள் மற்றும் பணம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆரம்பக்கட்ட […]
கொழும்பு மிரிஹான பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பன்னிப்பிட்டியாவில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் பணியாற்றிய ஊழியரை தாக்கிய சம்பவம் தொடர்பில் 34 வயதுடைய நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஜூன் 3 ஆம் திகதி இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் சந்தேகநபர் தேவையான கியூஆர் (QR) குறியீடு இன்றி எரிபொருள் பெற முயன்றதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கியூஆர் குறியீடு இல்லாமல் எரிபொருள் வழங்க முடியாது என ஊழியர் தெரிவித்ததைத் தொடர்ந்து இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதுடன் […]
சாவகச்சேரியில் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்ட இளைஞன்எழுச்சி பாடல் பாடி அதனை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. சாவகச்சேரி பகுதியில் உள்ள ஆலயத்தில் இடம்பெற்ற இசை நிகழ்வில் பாடலை பாடி அந்த பாடலுக்கு தானே இசை சேர்க்கையில் உருவான சொல்லிசை பாடலை இணைத்து சமூக ஊடகங்களில் கிளிநொச்சியைச் சேர்ந்த சொல்லிசை கலைஞன் பகிர்ந்திருந்தார். அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் இளைஞனை கைது செய்து விசாரணைகளின் […]
குவைத் பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்ட 4 உயர்நிலை ஈரான் கடற்படை அதிகாரிகள் தாங்கள் ஈரானின் Revolutionary Guards (IRGC) அமைப்புடன் தொடர்புடையவர்கள் என விசாரணையில் ஒப்புக்கொண்டுள்ளதாக குவைத் அரசின் KUNA செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. குவைத் உள்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி கைது செய்யப்பட்டவர்கள் கடற்படை கர்னல் அமீர் ஹொசைன் அப்தோல் முகமது ஜரேய், கடற்படை கர்னல் அப்தோல்சமட் யெடலே கானாவதி, கடற்படை கேப்டன் அஹ்மத் ஜம்ஷித் கோலம்ரேசா சோல்பகாரி மற்றும் முதல் லெப்டினன்ட் முகமது […]
பாரிஸ் இளம்பெண் பாலியல் பலாத்காரம் – சந்தேக நபர் கைது. பாரிஸின் 18ஆம் மாவட்டத்தில் பாரிஸ் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மே 2ஆம் தேதி இரவு முதல் மே 3ஆம் தேதி அதிகாலை வரை நடந்த இந்த சம்பவத்தில் சுமார் காலை 5 மணியளவில் அந்த இளைஞர் பெண்ணை தனியாக நடந்து கொண்டிருந்தபோது குறிவைத்து பலவந்தமாக பொதுக் கழிப்பறைக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர் அப்போது […]
கொழும்பு பேருந்து நிலையம் – சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த சந்தேக நபர் கைது 2026 ஏப்ரல் 08 ஆம் தேதி புதுப்பித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்ட புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தின் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டதாக கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் புறக்கோட்டை பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்தனர். இந்த முறைப்பாடு கொழும்பு பேருந்து நிலையம் நலன்புரி பிரிவினரால் அளிக்கப்பட்டதாகும். தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம் 2026 ஏப்ரல் 11 ஆம் தேதி குறித்த குற்றச்செயலுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் […]