குவைத் பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்ட 4 உயர்நிலை ஈரான் கடற்படை அதிகாரிகள் தாங்கள் ஈரானின் Revolutionary Guards (IRGC) அமைப்புடன் தொடர்புடையவர்கள் என விசாரணையில் ஒப்புக்கொண்டுள்ளதாக குவைத் அரசின் KUNA செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

குவைத் உள்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி கைது செய்யப்பட்டவர்கள் கடற்படை கர்னல் அமீர் ஹொசைன் அப்தோல் முகமது ஜரேய், கடற்படை கர்னல் அப்தோல்சமட் யெடலே கானாவதி, கடற்படை கேப்டன் அஹ்மத் ஜம்ஷித் கோலம்ரேசா சோல்பகாரி மற்றும் முதல் லெப்டினன்ட் முகமது ஹொசைன் சோஹ்ராப் ஃபோர்கி ஆகியோர் ஆவர்.

இவர்கள் மே 1 ஆம் தேதி Bubiyan தீவுக்குள் மீன்பிடி படகின் மூலம் ரகசியமாக நுழைந்து குவைத்துக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டதாக விசாரணையில் தெரிவித்துள்ளனர்.

இந்த குழுவினர் பயன்படுத்திய படகு குறிப்பாக இந்த நடவடிக்கைக்காக வாடகைக்கு எடுக்கப்பட்டதாகவும் குவைத் ஆயுதப்படைகள் நடத்திய நடவடிக்கையின் போது ஒருவருக்கு காயம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. அதேவேளை IRGC-க்கு தொடர்புடைய மேலும் இருவர் கடற்படை கேப்டன் மன்சூர் கம்பாரி மற்றும் படகின் இயக்குநரான அப்துலாலி காசெம் சியாம்ரி தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading