அரபு லீக் பொதுச்செயலாளர் அஹ்மத் அபூல் கைத் இந்த தாக்குதல்கள் மத்திய கிழக்கில் பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தக்கூடும் என எச்சரித்து உடனடி மத்திய கிழக்கில் பதற்றம் தணிப்பு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தினார். மேலும் அரபு பாராளுமன்றமும் இந்த நடவடிக்கையை சர்வதேச சட்டங்களுக்கும் நல்ல அண்டை நாடு உறவுகளுக்கும் எதிரானதாகக் குறிப்பிட்டு கண்டனம் வெளியிட்டது.
ஐக்கிய அரபு அமீரகமும் தாக்குதல்களை வன்மையாக கண்டித்து பஹ்ரைன் குவைத் மற்றும் ஜோர்டானின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு முழு ஆதரவு தெரிவித்துள்ளது. இதேவேளை பிராந்திய நாடுகள் அமைதி மற்றும் நிலைத்தன்மையை பாதுகாக்க தூதரக பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காண வேண்டுமென அழைப்பு விடுத்துள்ளன.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான அண்மைய மோதல்களின் பின்னணியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதால் மத்திய கிழக்கில் பாதுகாப்பு சூழல் மீண்டும் கவலைக்குரிய நிலையை எட்டியுள்ளது.
































