ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியான் (Masoud Pezeshkian) சமீபத்தில் நடந்த மத்திய கிழக்கு பதற்றம் குறித்து முக்கியமான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார்.
முன்னதாக அண்டை நாடுகளுக்கு தாக்குதல் நடத்தியதற்காக மன்னிப்பு தெரிவித்திருந்த அவர், தற்போது தனது அந்த கருத்தை மாற்றி, எந்த நாட்டின் நிலப்பரப்பிலிருந்தும் ஈரானுக்கு எதிராக தாக்குதல் நடத்தப்பட்டால் அதற்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று கூறினார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களுக்கு பதிலாக ஈரான் பல இடங்களில் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியது. இதனால் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற வளைகுடா நாடுகளில் பதற்றம் அதிகரித்துள்ளது. ஈரான், இந்த தாக்குதல்கள் அந்த நாடுகளை குறிவைத்து அல்ல, அமெரிக்கா மற்றும் அதன் இராணுவ தளங்களை குறிவைத்து மேற்கொள்ளப்பட்டவை என்று தெரிவித்துள்ளது.
அதேசமயம், வளைகுடா நாடுகள் தங்கள் நிலப்பரப்பு அல்லது வான்வழியை பயன்படுத்தி ஈரானுக்கு எதிராக தாக்குதல் நடத்த அனுமதித்தால், அந்த நாடுகளும் பதிலடி நடவடிக்கைகளுக்கு உள்ளாகலாம் என்று ஈரான் எச்சரித்துள்ளது. இந்த சூழ்நிலை காரணமாக மத்திய கிழக்கில் போர் பதற்றம் மேலும் அதிகரித்து வருகிறது.





Leave a Reply