Tag: Asia News
லாவோஸின் Xaisomboun மாகாணத்தில் வெள்ளம் நிரம்பிய குகையில் பல நாட்களாக சிக்கியிருந்த கிராமவாசிகள் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து உணர்ச்சிபூர்வமான காட்சிகள் பதிவாகியுள்ளன. கடும் மழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் குகைக்குள் சிக்கியிருந்த ஏழு பேரில் மீட்புக் குழுவினர் முன்னதாக ஒருவரை பாதுகாப்பாக வெளியே கொண்டு வந்ததையடுத்து மேலும் நால்வர் உயிருடன் மீட்கப்பட்டனர். அவர்கள் வெளியே வந்தபோது மீட்புப் பணியாளர்கள் ஒருவரையொருவர் கட்டியணைத்து கொண்டாடியதுடன் குடும்பத்தினரும் கிராம மக்களும் மகிழ்ச்சிக் கண்ணீருடன் அவர்களை வரவேற்றனர். இந்த ஆபத்தான மீட்புப் பணியில் […]
லாவோஸின் Xaisomboun மாகாணத்தில் வெள்ளம் நிரம்பிய குகையில் சிக்கியிருந்த நால்வர் சர்வதேச மீட்புக் குழுவினரால் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மதிப்புள்ள கனிமங்களைத் தேடி சென்ற ஏழு கிராமவாசிகள் திடீர் கனமழை மற்றும் வெள்ளத்தால் குகைக்குள் சிக்கியிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவர்களில் ஒருவரை முன்னதாக மீட்ட நிலையில் தற்போது மேலும் நால்வர் பாதுகாப்பாக வெளியே கொண்டு வரப்பட்டுள்ளனர். இருப்பினும் இன்னும் இரண்டு பேர் காணாமல் போயுள்ளதால் அவர்களை தேடும் பணிகள் தீவிரமாக தொடர்கின்றன. மிகவும் குறுகிய சேறும் நீரும் நிரம்பிய […]
வடகொரியா ஏவுகணை ஏவல் வடகொரியா செவ்வாய்க்கிழமை கடல் நோக்கி பல குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியுள்ளதாக தென்கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது. இந்த ஏவுகணைகள் வடகொரியாவின் மேற்கு கரையோர நகரமான ஜோங்க்ஜுவிலிருந்து ஏவப்பட்டதாகவும் சம்பவத்தையடுத்து தென்கொரியா தனது கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் ஜப்பானுடன் இணைந்து நிலைமையை நெருக்கமாக கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. கடந்த ஏப்ரல் மாத ஆயுதச் சோதனைக்குப் பிறகு வடகொரியா மேற்கொண்ட முதல் பெரிய ஏவுகணை நடவடிக்கையாக இது […]
தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கில் இடம்பெற்ற பாரிய ரயில் விபத்தில் குறைந்தது எட்டு பேர் உயிரிழந்துள்ளதுடன் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மக்காசான் (Makkasan) ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள ரயில் கடவைப் பகுதியில் இன்று பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. பொதுப் போக்குவரத்து பேருந்தொன்று ரயில் பாதையை கடக்க முயன்றபோது அதிவேகமாக வந்த சரக்கு ரயில் பேருந்தில் மோதி இழுத்துச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. மோதி தாக்கிய உடனேயே பேருந்தில் தீப்பற்றியதுடன் அருகில் இருந்த சில வாகனங்களும் […]
ஜப்பானின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள Tohoku Region பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.7 மெக்னிடியூட் அளவில் பதிவாகியுள்ளதாகவும் பல பகுதிகளில் அதிர்வுகள் உணரப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து மக்கள் மத்தியில் அச்சநிலை ஏற்பட்ட போதிலும் தற்போது வரை பெரும் சேதங்கள் அல்லது உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேவேளை இந்த நிலநடுக்கத்தால் ஆழிப்பேரலை […]