வடகொரியா ஏவுகணை ஏவல் வடகொரியா செவ்வாய்க்கிழமை கடல் நோக்கி பல குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியுள்ளதாக தென்கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது. இந்த ஏவுகணைகள் வடகொரியாவின் மேற்கு கரையோர நகரமான ஜோங்க்ஜுவிலிருந்து ஏவப்பட்டதாகவும் சம்பவத்தையடுத்து தென்கொரியா தனது கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் ஜப்பானுடன் இணைந்து நிலைமையை நெருக்கமாக கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
கடந்த ஏப்ரல் மாத ஆயுதச் சோதனைக்குப் பிறகு வடகொரியா மேற்கொண்ட முதல் பெரிய ஏவுகணை நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது. அமெரிக்காவுடனான அணு பேச்சுவார்த்தைகள் முறிந்ததிலிருந்து வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் தனது அணு மற்றும் ஏவுகணை திறன்களை தொடர்ந்து விரிவுபடுத்தி வருகிறார். இதேவேளை தென்கொரியாவின் புதிய நிர்வாகம் தனது பாதுகாப்புத் திறன்களை மேலும் மேம்படுத்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியுள்ள நிலையில் கொரிய தீபகற்பத்தில் மீண்டும் பாதுகாப்பு பதற்றம் உயர்ந்துள்ளது





Leave a Reply