Tag: economic stability
Asia News,அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் பலவீனமடைந்துள்ள நிலையில் டொலரின் விற்பனை விலை மீண்டும் 340 ரூபாய் எல்லையைத் தாண்டியுள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தினசரி மாற்று விகிதத் தரவுகளின்படி ஜூலை 9 அன்று ஒரு அமெரிக்க டொலரின் விற்பனை விலை 340.8686 ரூபாயாக பதிவாகியுள்ளது. இதனுடன் டொலரின் கொள்முதல் விலை 331.3476 ரூபாயாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய நாளான ஜூலை 8 அன்று டொலரின் விற்பனை விலை 339.7382 ரூபாயாகவும் […]
இலங்கை தற்போது மிக மோசமான பொருளாதாரச் சூழ்நிலையை எதிர்நோக்கி வருவதாகவும் 2028ஆம் ஆண்டு முதல் நாட்டின் கடன் திருப்பிச் செலுத்தும் சுமை மேலும் அதிகரிக்கவுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஐக்கிய இளைஞர் சக்தியின் கண்டி மாவட்ட இளைஞர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) இணக்கப்பாடு 2027 மார்ச் மாதத்துடன் நிறைவடையவுள்ள நிலையில் 2028ஆம் ஆண்டு முதல் தற்போது செலுத்தப்படும் கடன் தொகைக்கு மேலதிகமாக ஆண்டுதோறும் 2.5 முதல் 3.5 […]
ADB அவசர உதவி திட்டத்தின் கீழ் மத்திய கிழக்கு மோதலால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு 4 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி வழங்கப்படவுள்ளதாக ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) அறிவித்துள்ளது. இந்த உதவியைப் பெறும் 15 நாடுகளில் இலங்கையும் இடம்பெற்றுள்ளது. மத்திய கிழக்கில் நீடித்து வரும் பதற்றம் காரணமாக பல நாடுகள் பொருளாதார அழுத்தங்களை எதிர்கொண்டு வருகின்றன. குறிப்பாக எரிபொருள், உணவுப் பொருட்கள் மற்றும் உர விநியோகத்தில் ஏற்பட்டுள்ள சவால்களை சமாளிக்க இந்த நிதி உதவி வழங்கப்படவுள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள […]
ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலையையும் எதிர்காலத்தில் எதிர்நோக்கப்படக்கூடிய சவால்களையும் கருத்தில் கொண்டு அனைத்து அரசியல் சக்திகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியுள்ளார். தனித்தனியாகவும் பிரிந்து செயல்படும் அரசியல் அணுகுமுறைகள் தற்போதைய சூழலில் பயனளிக்காது எனக் குறிப்பிட்ட அவர் நாட்டின் நிலைத்தன்மை ஜனநாயக நடைமுறை மற்றும் பொருளாதார வளர்ச்சியை உறுதிப்படுத்த அரசியல் தரப்புகளுக்கு இடையிலான உரையாடல் மற்றும் ஒத்துழைப்பு அதிகரிக்கப்பட வேண்டும் என்று […]
நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்படாது என அரசு உறுதியளித்துள்ளது. அடுத்த மகா சாகுபடி பருவம் வரை போதுமான அரிசி கையிருப்பு இருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.தற்போது நெல் சந்தைப்படுத்தல் சபை வசம் சுமார் 140,000 மெட்ரிக் தொன் அரிசி கையிருப்பில் உள்ளது. எனவே சந்தை விநியோகத்தில் சிக்கல் ஏற்படாது என அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். மேலும் உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்ய மாற்று அரிசி வகைகளை இறக்குமதி செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் சந்தை நிலைத்தன்மையை பேண […]
மத்திய கிழக்கு போர் தாக்கம் – எரிபொருள் சவால்கள் குறித்து ஜனாதிபதி விளக்கம் நடைபெற்று வரும் மோதலின் பின்னணியில் நாட்டில் உருவாகியுள்ள அச்சம் மற்றும் பொருளாதார பாதிப்புகளை கருத்தில் கொண்டு, ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க அவர்கள் இன்று விசேட ஊடக சந்திப்பில் உரையாற்றினார். மத்திய கிழக்கு போர் தொடர்பாக இலங்கை தனது நடுநிலை நிலைப்பாட்டைத் தக்கவைத்துக் கொள்ளும் என அவர் வலியுறுத்தினார். உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் ஏற்பட்ட தடைகள் காரணமாக எரிபொருள் கப்பல் தாமதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் […]